முகப்பு
செய்திகள்

தில்லி முதல்வராக அரவிந்த் கேஜரிவால் 3ஆவது முறையாகப் பதவியேற்பு

தில்லி சட்டப் பேரவைத் தேர்தலில் அரவிந்த் கேஜரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி கட்சி 62 இடங்களில் வெற்றி பெற்றது. ராம் லீலா மைதானத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற பதவியேற்பு விழாவில் நண்பகல் 12.15 மணியளவில் முதல்வராக அரவிந்த் கேஜரிவாலுக்கு துணைநிலை ஆளுநர் அனில் பய்ஜால் பதவிப் பிரமாணமும், ரகசியக் காப்புப் பிரமாணமும் செய்துவைத்தார். கடவுள் ஈஸ்வரரின் பெயரால் கேஜரிவால் பதவிப் பிரமாணம் எடுத்துக் கொண்டார். அவரைத் தொடர்ந்து, கேபினட் அமைச்சர்களாக மணீஷ் சிசோடியா, சத்யேந்தர் ஜெயின், கோபால் ராய், இம்ரான் ஹுசேன், கைலாஷ் கெலாட், ராஜேந்திர பால் கெளதம் ஆகிய 6 பேரும் பதவியேற்றுக் கொண்டனர். 

Updated On : 2 பிப்ரவரி, 2024 at 8:58 AM
பகிர்:
முழு கட்டுரையைப் படிக்க →