ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையின் இரண்டாவது டவர் பிளாக்கின் பின்புறத்தில் உள்ள கல்லீரல் அறுவை சிகிச்சைப் பிரிவில் தீ விபத்து நேரிட்டது.மீட்புப் படையினர், மருத்துவமனை வளாகத்துக்குள் சிக்கிக் கொண்ட நோயாளிகளை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.தீ விபத்தைத் தொடர்ந்து திடீரென வெடிசப்தம் கேட்டது. வெடி சப்தத்தைத் தொடர்ந்து கரும்புகை வெளியேறியது.மருத்துவ உபகரணங்கள் வைக்கப்பட்டிருந்த அறையிலிருந்து மின் கசிவு காரணமாக தீ விபத்து நேரிட்டதாக முதற்கட்ட செய்திகள் வெளியாகின.தீ விபத்து குறித்து தகவல் அறிந்ததும் உடனடியாக விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர், தீயைக் கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.மருத்துவமனைக்குள் சிக்கியிருக்கும் நோயாளிகளை பத்திரமாகக் கொண்டுவரும் பணி நடைபெற்றபோது..நோயாளிகளை பத்திரமாக மீட்ட தீயணைப்புத் துறையினர்.தீ விபத்து நடந்த இடத்திலிருந்து 32 நோயாளிகள் பத்திரமாக மீட்கப்பட்டனர்.தீயணைப்புத் துறையினர் துரிதமாக செயல்பட்டு தண்ணீரை பாய்ச்சி, தீயைக் கட்டுப்படுத்தினார்கள்.சம்பவ இடத்துக்கு சென்னை மேயர் பிரியா ராஜன் நேரில் வந்து ஆய்வு செய்தார்.சம்பவப் பகுதியே புகைமண்டலமாகக் காட்சியளித்தது.தீயைக் கட்டுப்படுத்தும் பணி நடைபெற்ற போது..தீயைக் கட்டுப்படுத்தும் பணி நடைபெற்ற போது..தீயைக் கட்டுப்படுத்தும் பணி நடைபெற்ற போது..சம்பவ இடத்துக்கு சென்னை மேயர் நேரில் வந்து ஆய்வு செய்தார்.