முகப்பு
செய்திகள்

20-வது நாளில் ரஷியா - உக்ரைன் போர் - புகைப்படங்கள்

ரஷிய அதிபரின் உத்தரவைத் தொடர்ந்து உக்ரைன் நாட்டின் மீது ரஷியப் படைகள் கடந்த 20 நாள்களாக தொடர் தாக்குதலை நடத்தி வரும் நிலையில், கார்கிவ் உள்ளிட்ட முக்கிய நகரங்களையும் ரஷியப் படைகள் கைப்பற்றியுள்ளனர்.

Updated On : 15 மார்ச், 2022 at 10:48 PM
மரியுபோலில், ரஷியப் படை மேற்கொண்ட வான்வழித் தாக்குதலில், குண்டு வெடித்து சேதமடைந்த கட்டடத்திலிருந்து எழும் கறும் புகை.
பகிர்:
தொடர் தாக்குதலால், கிழக்கு மரியுபோலில் உள்ள ஃபோன்டானா தெருவில் எழும் கரும் புகை.
மேற்கு மரியுபோலில் பலத்த சேதமடைந்த அடுக்குமாடி கட்டடங்கள்.
இர்பின் நகரில் குண்டு மழை பொழிந்து அழிக்கப்பட்ட பாலத்தின் கீழ் நடந்து செல்லும் உக்ரைன் ராணுவ வீரர்கள்.

Advertisement

உக்ரைன் தலைநகர் கீவ்வின் குடியிருப்புகள் உள்ளிட்ட கட்டடங்கள் மீது ரஷியப் படைகள் தொடர் தாக்குதலுக்குள்ளான பகுதியில், தீயை அணைக்கும் பணியில் வீரர்கள்.
கீவ் நகரில் தாக்குதலுக்குள்ளான குடியிருப்பு பகுதியில் தீயை அணைக்கும் பணியில் வீரர்கள்.
கீவ் நகரில் ரஷியப் படைகள் முக்கிய இடங்களை குறிவைத்து தாக்கியதால் உருக்குழைந்த டிராலிபஸ்.
தாக்குதலுக்குள்ளான குடியிருப்புப் பகுதியை தண்ணீர் பீச்சி, தீயை அணைக்கும் பணியில் வீரர்கள்.
உக்ரைனில் உருக்குழைந்த அடுக்குமாடி குடியிருப்புப் பகுதியை விட்டு செல்லும் முதியவர்.
உக்ரைனின் மரியுபோல் மீது ரஷியா நடத்திய தாக்குதலில் காயமடைந்த கர்ப்பிணியை மருத்துவமனை அழைத்துச் செல்லும் வீரர்கள்.
செக் குடியரசின் ப்ராக் நகரில் உள்ள காங்கிரஸ் மையத்தில் போரில் இருந்து தப்பி, அகதிகள் முகமில் தஞ்சமடைந்த சிறுமி.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.