முகப்பு
செய்திகள்

வங்கதேசத்தில் வன்முறை - புகைப்படங்கள்

இடஒதுக்கீடுக்கு எதிரான போராட்டம் மீண்டும் தீவிரம்!

Updated On : 5 ஆகஸ்ட், 2024 at 5:20 PM
வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா பதவி விலகிய நிலையில், நாட்டை விட்டு வெளியேறிதாகவும், வங்கதேச இடைக்கால அரசை அந்நாட்டு ராணுவம் கைப்பற்றியதாகவும் ராணுவ தளபதி அறிவிப்பு. - MONIRUL ALAM
பகிர்:
போராட்டத்தை கைவிட்டு ஒத்துழைப்பு வழங்குமாறு மக்களுக்கு வங்கதேச ராணுவம் வேண்டுகோள்.
தக்ஷின் தினாஜ்பூர் மாவட்டத்தில் உள்ள ஹிலியில் இந்தியா-வங்கதேச எல்லை சோதனைச் சாவடியில் காவலுக்கு நிற்கும் எல்லைப் பாதுகாப்புப் படை வீரர்.
வன்முறையை கட்டுப்படுத்த இன்று (ஆகஸ்டு 05) மாலை 6 மணி முதல் நாடு தழுவிய ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு அமல்படுத்தப்பட்டுள்ளது.
அரசு வேலை ஒதுக்கீட்டு முறையில் சீர்திருத்தங்களைக் கோரி மாணவர்கள் தலைமையிலான போராட்டங்களைத் தொடர்ந்து, பங்கபந்து ஷேக் முஜிப் மருத்துவ பல்கலைக்கழகத்தில் எழும் புகை.
இந்தியா-வங்கதேச எல்லை சோதனைச் சாவடியில் பாதுகாப்பு பணியில் எல்லைப் பாதுகாப்புப் படை வீரர்.
டாக்காவில் சீர்திருத்தங்களைக் கோரி மாணவர்கள் தலைமையிலான போராட்டங்களைத் தொடர்ந்து தீ பற்றி எரிந்த வாகனம்.
வங்கதேசத்தில் ஊரடங்கு உத்தரவை அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட ராணுவ வீரர்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.