பெருமைகள் பல பெற்ற கங்கை நதிக்கு நன்றிக் கடனாக நாள்தோறும் மாலை வேளையில் செய்யப்படும் பூஜையே 'கங்கா ஆரத்தி' ஆகும். இந்த மாபெரும் பூஜையானது கங்கைக் கரையில் சிறப்பாக நடைபெறும்.
பகிர்:
பூஜையை காணவும், தரிசனம் செய்யவும் தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கங்கை நதிக்கரையில் கூடுவது வழக்கம்.பல நூற்றாண்டுகள் பழமையான இந்த கங்கா ஆரத்தி சடங்கு ஒரு பிரபலமான சுற்றுலா அம்சமாக மாறியுள்ளது மற்றும் வாரணாசிக்கு வரும் அனைவரும் பார்க்க வேண்டிய இடமாக உள்ளது.