பிரயாக்ராஜில் கங்கை, யமுனை, சரஸ்வதி ஆகிய மூன்று நதிகளும் சங்கமிக்கும் திரிவேணி சங்கமத்தில் நீராடிய குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு.
பகிர்:
12 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் இந்த நிகழ்வு ஜனவரி 12ஆம் தேதி தொடங்கி வருகிற பிப்ரவரி 26 ஆம் தேதி வரை என 45 நாட்கள் நடைபெறுகிறது.நிகழ்வில் துறவிகள், சாதுக்கள், சாத்விகள், கல்பவாசிகள், யாத்ரீகர்களை பொது மக்கள் உள்பட பலர் கலந்துகொண்டு திரிவேணி சங்கமத்தில் நீராடி வருகின்றனர்.பறவைகளுக்கு உணவளித்த பிறகு திரிவேணி சங்கமத்தில் புனித நீராடிய குடியரசு தலைவர் திரவுபதி முர்மு.குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு உள்பட மத்திய அமைச்சர்கள் மற்றும் பல்வேறு மாநில முதல்வர்கள், தொழிலதிபர்கள் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்களும் புனித நீராடியுள்ளனர்.