தொடர்ந்து 15 ஆண்டுகள் டெல்லியின் முதலமைச்சராக பதவி வகித்த தில்லியின் முதல்வராக இருந்து உள்ளார்.தில்லி பல்கலைக் கழகத்தின் மிராந்தா ஹவுஸ் கல்லூரியில் பயின்று முதுகலைப் பட்டம் பெற்றார்.ஐக்கிய நாடுகள் சபையின் 'ஸ்டேட்டஸ் ஆப் உமன்' ஆணையத்தில் ஐந்து ஆண்டுகள் (1984-1989) வரை இந்தியாவின் பிரதிநிதியாக இருந்தார்.ராஜீவ்காந்தி ஆட்சிக் காலத்தின் போது, 1984ஆம் ஆண்டில் அமைச்சராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். மத்திய அமைச்சராக 1986-1989ஆம் ஆண்டுகளில் பணியாற்றினார்.டிசம்பர் 2013ம் ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தலில் இவர் ஆம் ஆத்மி கட்சியின் முதல்வர் வேட்பாளரான அரவிந்த் கெஜ்ரிவாலிடம் தன் சொந்தத் தொகுதியில் தோல்வியுற்று முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார்.ஷீலா தீட்சித், மார்ச் 2014 முதல் ஆகஸ்ட் 2014வரை கேரள மாநில ஆளுநராகப் பதவி வகித்தார். பிறகு ராஜினாமா செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.2008-ஆம் ஆண்டில் இந்திய பத்திரிகையாளர் சங்கத்தின் 'சிறந்த முதல்வர்', 2009-ல் என்.டி.டி.வி வழங்கிய 'ஆண்டின் சிறந்த அரசியல்வாதி' போன்ற பல விருதுகளுடன் அவர் கெளரவிக்கப்பட்டார்.