முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் 3ஆம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி, தில்லியில் அவரது நினைவிடத்தில் பிரதமர் மோடி மலர் தூவி மரியாதை செலுத்தினார்.இந்தியாவின் உயரிய விருதான, 'பாரத ரத்னா' விருதைப் பெற்றுள்ள வாஜ்பாய், உடல்நலக் குறைவு காரணமாக கடந்த 2018ஆம் ஆண்டு காலமானார்.முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் நினைவு தினத்தையொட்டி, தில்லியில் அவரது நினைவிடத்தில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.வாஜ்பாய் நினைவு நாளையொட்டி மத்திய அமைச்சர்கள் அமித்ஷா, ராஜ்நாத் சிங் மற்றும் பாஜக தேசிய தலைவா் ஜெ.பி.நட்டா மரியாதை செலுத்தினர்.முன்னாள் பிரதமர் வாஜ்பாய் நினைவிடத்தில் மலர் தூவி மரியாதை செலுத்திய மத்திய விமானப் போக்குவரத்து அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா.முன்னாள் பிரதமர் வாஜ்பாய் நினைவிடத்தில் மரியாதை செலுத்திய மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்.பிரதமராக பதவியேற்ற முதல் பாஜக தலைவர் என்ற பெருமைக்குரிய வாஜ்பாய், தனது 93 ஆவது வயதில் உடல்நலக் குறைவால் காலமானார்.வாஜ்பாய் குடும்பத்தினரும் அவரது நினைவிடத்தில் மலர்தூவி மரியாதை செலுத்தினர்.தில்லியில் உள்ள அவரது நினைவிடமான 'சதைவ் அடல்' மலர்களால் அலங்கரிக்கப்பட்டது.