29.1.1976  
அரை நூற்றாண்டுக்கு முன்

29.1.1976: நகர்ப்புற நில உச்சவரம்பு மசோதா தாக்கல் - 500 முதல் 2000 சதுர மீட்டராக நிர்ணயம்

நகர்ப்புற நில உச்சவரம்பு மசோதா தாக்கல் செய்யப்பட்டது பற்றி...

இணையதளச் செய்திப் பிரிவு

புதுடில்லி, ஜன. 28 - நகர்ப்புற நில உச்சவரம்பு மசோதாவை சர்க்கார் இன்று லோக்சபையில் தாக்கல் செய்தது. தமிழ்நாடு, கேரளம் முதலிய சில ராஜ்யங்கள் நீங்கலாக, 11 ராஜ்யங்களிலும், யூனியன் பிரதேசங்களிலும் இந்த மசோதா உடனடியாக அமலுக்கு வருகிரது.

இந்த மசோதாவின்படி நகர்ப்புற பகுதிகள் ஏ, பி, ஸி, டி என்ற 4 பிரிவுகளாக வகைப்படுத்தப்பட்டு, காலி நிலஉடைமை மற்றும் சுயாதீனத்திற்கு உச்சவரம்பு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

“ஏ” பிரிவு பகுதியில் 500 சதுர மீட்டர், “பி” பிரிவு பகுதியில் 1000 சதுர மீட்டர், “சி” பிரிவு பகுதியில் 1500 சதுர மீட்டர், “டி” பிரிவு பகுதியில் 2000 சதுர மீட்டர் என்ற பல்வேறு அளவில், காலி நிலத்திற்கு உச்சவரம்பு விதிக்கப்பட்டிருக்கிறது. மசோதாவில் 46 ஷரத்துகளும் 2 ஷெட்யூல்களும் இருக்கின்றன. ஆந்திரப் பிரதேசம், குஜராத், ஹரியானா, இமாசலப் பிரதேசம், கர்நாடகம், மகாராஷ்டிரம், ஒரிஸ்ஸா, பஞ்சாப், திரிபுரா, உத்தரப் பிரதேசம், மேற்கு வங்கம் ஆகிய 11 ராஜ்யங்களிலும் யூனியன் பிரதேசங்களிலும் இந்த மசோதாவின் விதிகள் உடனடியாக (அதாவது மசோதா பார்லிமெண்டில் தாக்கல் செய்யப்பட்ட இன்றைய தேதியிலிருந்து) அமலுக்கு வருகின்றன. மற்ற ராஜ்யங்களின் சட்டசபைகள், இம்மசோதாவை அங்கீகரித்த பின், அங்கீகரிக்கும் தேதியிலிருந்து அந்த ராஜ்யங்களில் அமலுக்கு வரும். ...

இடுக்கி உபரி மின்சாரம் முழுவதையும் த.நா. பெறும் - கேரள அரசுடன் உடன்பாடு: புதிய விலை நிர்ணயம்

திருவனந்தபுரம், ஜன. 28 - இடிக்கி திட்டத்திலிருந்து கிடைக்கும் எல்லா உபரி மின்சாரத்தையும் தமிழ்நாட்டுக்கு வழங்க கேரளா அரசு முடிவு செய்துள்ளது. இதன் விலை யூனிட்டுக்கு 12.5 பைசாவாக இருக்கும். (தற்போது யூனிட்டுக்கு 9.5 பைசா என்ற விலையில் கேரளா தமிழ்நாட்டுக்கு மின்சாரம் அளித்து வருகிறது.) அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு இந்த புதிய ஒப்பந்தம் அமல் செய்யப்படும்.

இதற்கான உடன்பாடு தமிழ்நாடு, கேரள அரசுகளுக்கிடையே ஏற்பட்டுள்ளதாக கேரளா முதல்வர் அச்சுதமேனன் இன்று மந்திரிசபைக் கூட்டத்துக்குப் பின்னர் கூறினார்.

இடிக்கியில் முதலாவது 130 மெகாவாட் ஜெனரேட்டர் அடுத்த மாதம் முதல் இயக்கத் தொடங்கும். இதன்மூலம் தமிழ்நாட்டுக்கு உடனடியாக சுமார் 40 கோடி யூனிட் மின்சாரம் அளிக்க முடியும் என்றும் அச்சுதமேனன் தெரிவித்தார்.

தமிழ்நாடு மின்சார அமைச்சர் சாதிக்பாட்சா ஞாயிறன்று இது குறித்து கேரள மின்துறை மந்திரி எம்.என். கோவிந்தன் நாயருடன் இங்கு பேச்சு நடத்தினார்.

29.1.1976: The Urban Land Ceiling Bill was introduced.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அஜீத் பவாரின் இறுதிச் சடங்கில் அனுமதியின்றி பறந்த ட்ரோன்கள்! சிறைப்பிடித்த போலீஸ்!

வேளாண் பாதுகாப்புக்கு முக்கியத்துவம்: இந்தியா - கனடா அமைச்சர்கள் பேச்சு!

OPS- ஐ மீண்டும் சேர்க்க வாய்ப்பே இல்லை! - EPS

விஜய் நல்ல நடிகர்தான்! ஆனால் சிறந்த அரசியவாதி நாங்கதான்! - EPS!

”யாருக்காக உச்சத்தை விட்டுட்டு வந்தீங்க?” விஜய்யை தாக்கிப் பேசிய EPS!

SCROLL FOR NEXT