மும்பையில் புதிய மேம்பாலம்: முதல்வர் ஃபட்னவீஸ் திறந்து வைத்தார்!
கிழக்கு-மேற்கு இணைப்பு மேம்பாலம் திறக்கப்பட்டது பற்றி..
தெற்கு மும்பையில் கிழக்கு-மேற்கு இணைப்பு மேம்பாலத்தை மகாராஷ்டிர முதல்வர் தேவேந்திர ஃபட்னவீஸ் காணொலி வாயிலாகத் திறந்துவைத்தார்.
மத்திய மும்பையில் 130 ஆண்டுகள் பழமையான பிரிட்டிஷ் கால பாலம் ஆபத்தானது என்று அறிவிக்கப்பட்ட நிலையில், இந்த பாலம் முழுமையாக அகற்றப்பட்டது.
இந்த நிலையில், புதிய மேம்பாலம் கடந்த இரண்டு ஆண்டுகளாக தடைப்பட்டிருந்த கிழக்கு-மேற்கு இணைப்பை மீட்டெடுக்கும். ஜஹாங்கிர் போமன் பெஹ்ராம் சாலை, டாக்டர் தாதாசாகேப் பத்காம்கர் மார்க் (கிராண்ட் சாலை), பதே பாபுராவ் மார்க், மகாலட்சுமி நிலைய பாலம் ஆகியவற்றில் நெரிசலைக் குறைக்கும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
Advertisement
Advertisement
தற்போது திறக்கப்பட்ட மேம்பாலத்தின் மொத்த நீளம் 333 மீட்டர். இதில் கிழக்குப் பகுதியில் 138.39 மீட்டர், மேற்குப் பகுதியில் 157.39 மீட்டர் மற்றும் ரயில்வே எல்லைக்குள் 36.90 மீட்டர் ஆகியவை அடங்கும்.
இந்த மேம்பாலமானது டார்டியோ, நாக்பாடா மற்றும் மும்பை மத்திய ரயில் நிலையத்தை இணைக்கிறது.
பிருஹன்மும்பை நகராட்சி (பிஎம்சி) மும்பை மத்திய ரயில் நிலையத்திற்கு அருகிலுள்ள மேம்பாலத்தை 15 மாதங்கள் மற்றும் ஆறு நாள்களில் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. டெண்டர் நிபந்தனைகளின்படி, நிர்ணயிக்கப்பட்ட நிறைவு காலக்கெடுவிற்கு நான்கு மாதங்கள் முன்னதாக கட்டிமுடிக்கப்பட்டுள்ளது.
பாலம் திறப்பு விழாவில் துணை முதல்வர் ஏக்நாத் ஷிண்டே உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
Maharashtra Chief Minister Devendra Fadnavis on Thursday virtually inaugurated the Tardeo-Nagpada-Mumbai Central flyover, a key east-west connecting link in south Mumbai that offers commuters a smoother alternative route.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.