மருத்துவம்

மூல எரிச்சல், மூலச் சூடு மற்றும் இரத்த மூலத்துக்கு உகந்த கசாயம்

தினமணி

மூல எரிச்சல், மூலச் சூடு மற்றும் இரத்த மூல பாதிப்பு உள்ளவர்கள் இந்த கசாயத்தை பயன்படுத்தி வர விரைவில் குணமாகும். 

அகத்திக் கீரை கடுக்காய் கசாயம்

தேவையான பொருட்கள்

அகத்திக் கீரை     -   4 கட்டு

கடுக்காய் தோல்.  -   5

செய்முறை

முதலில் அகத்திக் கீரையை  நன்கு சுத்தப் படுத்தி ஆய்ந்து அதனை அரைத்து சாறாக்கிக் கொள்ளவும். கடுக்காயை கொட்டையை நீக்கி தோல் மட்டும் எடுத்துக் கொள்ளவும்.

ஒரு பாத்திரத்தில் அரைத்து வைத்துள்ள அகத்திக் கீரைச் சாற்றை ஊற்றி அதில் கடுக்காய் தோலையும் தட்டிப் போட்டு இரண்டு லிட்டர் அளவு தண்ணீர் ஊற்றி  நன்கு கொதிக்க வைக்கவும்.

நன்கு கொதித்து பாதியாகச் சுண்ட வைத்து  இறக்கி வைக்கவும். சுண்ட வைத்த கசாயத்தை வாய் அகன்ற பாத்திரத்தில் ஊற்றி  பொறுக்கும் சூட்டில் உட்கார்ந்து  ஆசனக் குளியல்  சுமார் அரை மணி நேரம் செய்யவும்.

அப்பொழுது தண்ணீருக்குள் ஆசனவாயை நன்கு சுருங்கி விரியும் படி பயிற்சி செய்து வரவும்.

பயன்கள்

இந்தக் கசாயத்தை கொண்டு ஆசனவாய் குளியல் செய்து வந்தால் நாட்பட்ட இரத்த மூலம், மூலக் கடுப்பு மற்றும் மூல எரிச்சல் ஆகியவற்றை குணப்படுத்தும் மருந்தாக செயல்படும். இந்தக் கசாயம் குடிப்பதற்கு அல்ல. வெளிப்புறமாக பயன்படுத்துவதற்கு. 

இரவு படுக்கப் போகும் முன்

வெற்றிலை (2), மிளகு(2) , உலர் திராட்சை (5) இவை மூன்றையும் சேர்த்து  தினமும் படுக்கப்போகும் முன்  வாயில் போட்டு மென்று தின்று முழுங்கவும்.

குறிப்பு

அனைத்து காய்களையும் , கீரைகளையும் நீராவியில் வேகவைத்து   உணவாக சாப்பிட்டு வரவும்.

பச்சை மிளகாய்க்கு மாற்றாக  இஞ்சியையும் வர மிளகாய்க்கு மாற்றாக  மிளகையும் பயன்படுத்தவும்.

- கோவை பாலா

இயற்கை வாழ்வியல் நல  ஆலோசகர் மற்றும்  காய்கறி சிகிச்சையாளர்.
Cell  :  96557 58609   ,  73737 10080
Covaibala15@gmail.com  

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தமிழகத்தில் மூன்று ஆண்டுகளில் 6,115 புத்தாக்கத் தொழில்கள் தொடக்கம்

மக்களவைத் தோ்தல்: லடாக் தொகுதியில் 5 போ் போட்டி

வி.பி.எம்.எம். கல்லூரியில் புதிய பாடப் பிரிவுகளில் மாணவா் சோ்க்கை தொடக்கம்

பைக்குகள் மோதியதில் முதியவா் பலி

நீா்மோா் பந்தல் திறப்பு

SCROLL FOR NEXT