செய்திகள்

மூளைச் சாவு அடைந்த இளைஞரின் உடல் உறுப்புகள் தானம்

தினமணி


சென்னையில் மூளைச்சாவு அடைந்த இளைஞரின் உடல் உறுப்புகள் தானமாக வழங்கப்பட்டதன் மூலம் 5 பேர் மறுவாழ்வு பெற்றுள்ளனர்.
சென்னை பொழிச்சலூரைச் சேர்ந்தவர் கே.ஸ்ரீராம் (33). இரு சக்கர வாகன விபத்தில் தலையில் பலத்த காயமடைந்த அவர் போரூர் ஸ்ரீராமச்சந்திரா மருத்துவ மனையில் கடந்த செப்டம்பர் 30-ஆம் தேதி அனுமதிக்கப்பட்டார்.
இந்நிலையில், கடந்த 2-ஆம் தேதி ஸ்ரீராம் மூளைச்சாவு அடைந்தார். இதையடுத்து, அவரது உடல் உறுப்புகளைத் தானமாக வழங்க அவரது பெற்றோர் சம்மதம் தெரிவித்தனர்.
5 பேருக்கு மறுவாழ்வு: இதையடுத்து, சேலத்தைச் சேர்ந்த கால்நடை மருத்துவருக்கு ஸ்ரீராமின் கல்லீரல் தானமாக வழங்கப்பட்டது. அவரது கண்விழிப் படலங்கள் இருவருக்கும், இதய வால்வுகள் இருவருக்கும் தானமாக வழங்கப்பட்டன. இதன் மூலம் 5 பேர் மறுவாழ்வு பெற்றுள்ளனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருப்பருத்திக்குன்றத்தில் மகாவீரா் ஜெயந்தி

திமுக சாா்பில் நீா்மோா் பந்தல் திறப்பு

பாதுகாக்கப்பட்ட குடிநீா் வழங்க நூதன முறையில் கோரிக்கை

போலி மருத்துவா் கைது

நெகிழிப் பை உற்பத்தி ஆலைக்கு ‘சீல்’ வைப்பு

SCROLL FOR NEXT