செய்திகள்

அடிக்கடி உடம்பு வலி ஏற்படுகிறதா? மூலநோய் பிரச்னையா? இதை படித்துவிடுங்கள்!

முதலில் பிரண்டை பச்சையாக இருக்கும் போதே ஒரு லிட்டர் புளிப்பு மோரில் இரண்டு நாட்கள் ஊறப் போட்டு பின்பு அதனை காய வைத்த எடுத்துக் கொள்ளவும்

கோவை பாலா

கீரை :  பிரண்டைச் சத்து மாவு
 
தேவையான பொருட்கள்

நார் நீக்கி காயவைத்த பிரண்டைத் துண்டுகள்  -  அரை கிலோ
கோதுமை   -  ஒரு கிலோ
கறுப்பு எள்  -  100 கிராம்
கறுப்பு உளுந்து  - 100 கிராம்

செய்முறை : முதலில் பிரண்டை பச்சையாக இருக்கும் போதே ஒரு லிட்டர் புளிப்பு மோரில் இரண்டு நாட்கள் ஊறப் போட்டு பின்பு அதனை காய வைத்த எடுத்துக் கொள்ளவும். இதனுடன் மற்ற பொருட்களையும் இளம் சிவப்பாக வறுத்து அரைத்துக் கொள்ளவும். இதனை தேவையான அளவு மாவு எடுத்து கஞ்சி அல்லது களி செய்து  ஒருவேளை உணவாக சாப்பிட்டு வந்தால் உடல் வலி, மூல நோய், ஆசனவாயில் எரிச்சல், நமைச்சல் போன்றவை குணமாகும். 

சுண்டைக்காயை உலர்த்தி பொடியாக்கி சூரணம் செய்து வைத்துக் கொண்டு தினமும் ஐந்து கிராம் அளவு எடுத்து நீரில் கரைத்து சாப்பிட்டு வந்தால் ஆசனவாய் அரிப்பு நீங்கும். மலக்கிருமிகள் மற்றும் மூலக்கிருமிகள் அகலும்.

தினமும் இரவு படுக்கப் போகும் முன் வெற்றிலை (2), மிளகு (2), உலர் திராட்சை (5) இவை மூன்றையும் சேர்த்து வாயில் போட்டு மென்று தின்று முழுங்கவும்.

குறிப்பு : அனைத்து காய்களையும், கீரைகளையும் நீராவியில் வேக வைத்து உணவாக சாப்பிட்டு வரவும். பச்சை மிளகாய்க்கு மாற்றாக இஞ்சியையும் வரமிளகாய்க்கு மாற்றாக மிளகையும் பயன்படுத்தவும்.

கோவை பாலா
இயற்கை வாழ்வியல் நல ஆலோசகர்
96557 58609 / Covaibala15@gmail.com

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அமெரிக்காவில் வாகன விபத்தில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த 4 பேர் பலி !

காயத்தால் வெளியேறிய மெஸ்ஸி: பெனால்டியில் வென்ற இன்டர் மியாமி!

உசுரே நீதானே.... ஜனனி!

பூம்புகார் சங்கமத்துறையில் ஆடிப்பெருக்கு விழா கோலாகலம்!

தீரன் சின்னமலை நினைவு நாள்! முதல்வர் மு.க. ஸ்டாலின் மலர் தூவி மரியாதை!

SCROLL FOR NEXT