முகப்பு
செய்திகள்

பித்தத்தினால் உண்டாகும் பல நோய்களுக்கு நிவாரணம் தரும் சூப்

முதலில் புளியாரைக் கீரையை பொடி செய்து சுத்தப் படுத்திக் கொள்ளவும்.

Updated On : 14 ஜூலை 2019, 9:21 am IST
பகிர்:

புளியாரைக் கீரை சூப்

தேவையான பொருட்கள்

புளியாரைக் கீரை - ஒரு கட்டு
மிளகு - அரை ஸ்பூன்
சீரகம் - அரை ஸ்பூன்
பூண்டு - 6 பல்
இஞ்சி - ஒரு துண்டு
கொத்தமல்லி - ஒரு கைப்பிடி
புதினா இலை - ஒரு கைப்பிடி
மஞ்சள், உப்பு, எண்ணெய்  - தேவையான அளவு

Advertisement

Advertisement

செய்முறை : முதலில் புளியாரைக் கீரையை பொடி செய்து சுத்தப்படுத்திக் கொள்ளவும். வாணலியில் சிறிது எண்ணெய் விட்டு அவற்றில் மிளகு, சீரகம், பூண்டு, மஞ்சள், ஆகியவற்றை தட்டிப் போட்டு கொத்தமல்லி தழை, புதினா ஆகியவற்றைச் சேர்த்து அனைத்தையும் வதக்கி பின்னர் அதனுடன் நறுக்கி கீரையையும் சேர்த்து தேவையான அளவு தண்ணீர் ஊற்றி வேக வைத்து உப்பு சேர்த்து இறக்கி கொள்ளவும்.

பயன்கள் : இந்த சூப் பித்தத்தை தணிக்கக் கூடியது. அதனால் உண்டாகும் பல நோய்களை குணப்படுத்தும் நிவாரணியாக இருக்கும். இரவு படுக்கப் போகும் முன் வெற்றிலை (2), மிளகு(2), உலர் திராட்சை (5) இவை மூன்றையும் சேர்த்து தினமும் படுக்கப் போகும் முன் வாயில் போட்டு மென்று தின்று முழுங்கவும்.

குறிப்பு : அனைத்து காய்களையும், கீரைகளையும் நீராவியில் வேக வைத்து உணவாக சாப்பிட்டு வரவும். பச்சை மிளகாய்க்கு மாற்றாக இஞ்சியையும் வர மிளகாய்க்கு மாற்றாக மிளகையும் பயன்படுத்தவும்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments