FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
செய்திகள்

குழந்தையின்மை குறைபாட்டை சீர் செய்ய உதவும் அற்புத பானம்!

முதலில் சோற்றுக் கற்றாழையின்  சோற்றை அரிசி கழுவிய நீரில்  முறைப்படி கழுவி எடுத்து வைத்துக் கொள்ளவும்.

Updated On : 19 மார்ச் 2019, 11:13 am IST
பகிர்:

தலைப்பு : கருப்பை கட்டிகளை நீக்கி கருப்பையை பலப்படுத்தவும் மற்றும் குழந்தையில்லா குறைபாட்டை சீர் செய்ய உதவும் அற்புதமான பாயாசம்.

சோற்றுக் கற்றாழை பாயாசம்

தேவையான பொருட்கள்

Advertisement

Advertisement

சோற்றுக் கற்றாழைச் சோறு - கால் கிலோ 
முந்திரி பருப்பு - 10
பாதாம் பருப்பு - 10 
உலர் திராட்சை - 10 கிராம் 
சிறு பருப்பு - 100 கிராம் 
ஏலக்காய் - 5
நாட்டுச்சக்கரை -  100 கிராம் 
நெய் - ஒரு ஸ்பூன் 

செய்முறை

முதலில் சோற்றுக் கற்றாழையின்  சோற்றை அரிசி கழுவிய நீரில்  முறைப்படி கழுவி எடுத்து வைத்துக் கொள்ளவும். சிறு பருப்பை குழைய நன்கு வேக வைத்து மசித்துக் கொள்ளவும். ஒரு வாணலியில் ஒரு ஸ்பூன் நெய் விட்டு முந்திரி மற்றும் பாதாம் பருப்புகளை ஒன்றிரண்டாக பொடித்து போட்டு அதனுடன் ஏலக்காயையும், உலர் திராட்சையையும் சேர்த்து கொள்ளவும். அதனுடன் சோற்றுக் கற்றாழைச் சோறு மற்றும் மசித்து வைத்துள்ள சிறு பருப்பு சேர்த்து வேக வைக்கவும். நன்றாக வெந்தவுடன் நாட்டுச்சர்க்கரை சேர்த்து வேக வைத்து பாயாச பதத்தில்  இறக்கி வைத்துக் கொள்ளவும்.

பலன்கள் : இந்த பாயாசத்தை தொடர்ந்து குடித்து வந்தால் கருப்பையில் உண்டாகும் கட்டிகளை கரைத்து கருப்பையை பலப்படுத்தும் மற்றும் குழந்தையில்லா குறைபாட்டை சீர் செய்ய உதவும் அற்புதமான பானம் இது.

தினமும் இரவு படுக்கப் போகும் முன் வெற்றிலை (2), மிளகு (2), உலர் திராட்சை (5) இவை மூன்றையும் சேர்த்து வாயில் போட்டு மென்று தின்று முழுங்கவும்.

குறிப்பு : அனைத்து காய்களையும், கீரைகளையும் நீராவியில் வேக வைத்து உணவாக சாப்பிட்டு வரவும். பச்சை மிளகாய்க்கு மாற்றாக இஞ்சியையும் வர மிளகாய்க்கு மாற்றாக மிளகையும் பயன்படுத்தவும்.

கோவை பாலா
இயற்கை வாழ்வியல் நல ஆலோசகர்
96557 58609 / Covaibala15@gmail.com

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments