செய்திகள்

தீராத மலச்சிக்கல் குணமாக உதவும் அற்புதமான தேனீர்!

மேலே கூறிய பொருட்களை வாங்கி சுத்தப்படுத்தி ஒன்றாக கலந்து நன்கு அரைத்து தூளாக்கி வைத்துக் கொள்ளவும்.

கோவை பாலா

ஆவாரம் பூ தேனீர்

தேவையான பொருட்கள்

காய்ந்த ஆவாரம் பூ - கால் கிலோ
லவங்கப் பட்டை - 10 கிராம்
சுக்கு - 10 கிராம்
மிளகு - 10 கிராம்
திப்பிலி - 10 கிராம்
ஏலக்காய் - 10 கிராம்

செய்முறை : மேலே கூறிய பொருட்களை வாங்கி சுத்தப்படுத்தி ஒன்றாக கலந்து நன்கு அரைத்து தூளாக்கி வைத்துக் கொள்ளவும். இந்தத் தூளை ஒரு ஸ்பூன் அளவு எடுத்து இரண்டு தம்ளர் தண்ணீர் ஊற்றி நன்றாக கொதிக்க வைத்து வடிகட்டி அதனுடன் பால் மற்றும் நாட்டுச் சர்க்கரை சேர்த்து காலை மாலை என இருவேளையும் குடித்து வரவும்.

பலன்கள் : இந்த தேனீரை தொடர்ந்து குடித்து வந்தால் ரத்த அழுத்தம் உடனே குணமாகும். தீராத மலக்கட்டு மற்றும் மலச்சிக்கல் தீரும். சர்க்கரை குறைபாடு உள்ளவர்களுக்கு மிகச் சிறந்த பானமாக உதவக் கூடியது இந்த அற்புதமான தேனீர்.

தினமும் இரவு படுக்கப் போகும் முன் வெற்றிலை (2), மிளகு (2), உலர் திராட்சை (5) இவை மூன்றையும் சேர்த்து வாயில் போட்டு மென்று தின்று முழுங்கவும்.

குறிப்பு : அனைத்து காய்களையும், கீரைகளையும் நீராவியில் வேக வைத்து உணவாக சாப்பிட்டு வரவும். பச்சை மிளகாய்க்கு மாற்றாக இஞ்சியையும் வர மிளகாய்க்கு மாற்றாக மிளகையும் பயன்படுத்தவும்.

கோவை பாலா
இயற்கை வாழ்வியல் நல ஆலோசகர்
96557 58609 / Covaibala15@gmail.com

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

140 ஆண்டுகளுக்கு முன் மாயமான பேய்க் கப்பல் கண்டுபிடிப்பு!

அட்லாண்டிக் கடலில் புயலையே காணோம்! ஆய்வாளர்கள் அதிர்ச்சி!

நடுவரை நீக்கும் கோரிக்கையை மீண்டும் நிராகரித்த ஐசிசி; ஆசிய கோப்பையில் பாகிஸ்தான் தொடருமா?

யுசிஎல்: ரியல் மாட்ரிட்காக இளம் வயதில் களமிறங்கி சாதனை! அடுத்த மெஸ்ஸியா?

டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 25 காசுகள் உயர்ந்து ரூ.87.84 ஆக நிறைவு!

SCROLL FOR NEXT