உணவே மருந்து

இன்றைய மருத்துவ சிந்தனை மிளகு

தினமணி


                      
மிளகு, சுக்கு, திப்பிலி  - தலா 50 கிராம் எடுத்து பொடி செய்து கொள்ளவும். இதில் ஒரு கிராம் அளவு தேனில் கலந்து சாப்பிட்டு வந்தால் சளி, இருமல், உள்ளிட்ட கப நோய்கள் அனைத்தும் தீரும்.

மிளகு, கீழாநெல்லி வகைக்கு தலா 100 கிராம் எடுத்து பொடி செய்து வைத்துக் கொள்ளவும். இதில் ஒரு ஸ்பூன் அளவு காலை வெறும் வயிற்றில் சாப்பிட்டு வர கல்லீரல் வீக்கம் , பித்தப்பை கற்கள் போன்றவை தீரும்.

மிளகுத்தூளை தேன் கலந்து சாப்பிட்டால் இருமல் உடனே நிற்கும்.

10 மிளகை தூளாக்கி அரை லிட்டர் நீரிலிட்டு காய்ச்சி கஷாயமாக செய்து குடித்து வந்தால் கோழை மற்றும் இருமல் தீரும்.

வேண்டிய அளவு மிளகை புளித்த மோரில் ஊற வைத்து, காய வைத்து இளவறுப்பாக வறுத்து தூள் செய்து வைத்துக் கொள்ள வேண்டும். ஒவ்வொரு வேளை உணவுக்குப் பின்னரும் அரை கிராம் அளவு தூளைத் தேனில் குழைத்துச் சாப்பிட்டு வர குடல்வாயு, செரியாமை, ஏப்பம் ஆகியவை குணமாகும்.

மிளகுத் தூள், வெங்காயம், உப்பு இவற்றைச் சம எடையாகச் சேர்த்து அரைத்து, தலையில் பூசி 1 மணி நேரம் கழித்து தலையைக் கழுவ வேண்டும். தொடர்ச்சியாக 1 மாதம் வரை செய்து வர புதிய முடி வளர ஆரம்பிக்கும்.

அரை கிராம் மிளகுத் தூளுடன் ஒரு கிராம் வெல்லம் கலந்து காலை, மாலை சாப்பிட்டு வர தலைவலி, மூக்கடைப்பு தீரும்.

 
KOVAI  HERBAL CARE
கோவை பாலா ,
இயற்கை வாழ்வியல் நல  ஆலோசகர் மற்றும்  
Foot and Hand Reflexologist
Cell  :  96557 58609
Covaibala15@gmail.com

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

'மன்னித்துவிடுங்கள் அப்பா...' நீட் தேர்வு அழுத்தத்தால் மற்றொரு தற்கொலை!

லக்னௌ அணிக்கு 145 ரன்கள் இலக்கு நிர்ணயித்த மும்பை இந்தியன்ஸ்!

லண்டனில் பலரை வெட்டிய இளைஞர் கைது!

பறக்கும் முத்தத்தால் வந்த வினை; கேகேஆர் வீரருக்கு ஒரு போட்டியில் விளையாடத் தடை!

ஹமாஸ் அழிக்கப்படும் வரை போர் தொடரும்: நெதன்யாகு சூளுரை!

SCROLL FOR NEXT