உணவிலும் மாற்றம்!!!
உடலிலும் மாற்றம்!!!!
- திருநீற்றுப் பச்சிலை , கற்பூரம் , கஸ்தூரி மஞ்சள் , ஒமம் இவை அனைத்தையும் சம அளவு எடுத்து அரைத்து நெற்றியில் பற்றுப் போட்டால் தலை வலி , தலை பாரம் , காய்ச்சல் போன்றவை குணமாகும்.
- திருநீற்றுப் பச்சிலையின் வேரை (அரை கிராம்) அளவுக்கு எடுத்து நன்றாக அரைத்துச் சாப்பிட்டு வந்தால் நரம்புச் சம்பந்தப்பட்ட நோய்கள் குணமாகும்.
- திருநீற்றுப் பச்சிலைச் சாறு (100 மில்லி) , நல்லெண்ணெய். (1 லிட்டர்) இவை இரண்டையும் கலந்து தைல பதமாகக் காய்ச்சி இறக்கி , தினமும் தலையில் தேய்த்துக் குளித்து , உள்ளுக்கும் சாப்பிட்டு வந்தால் நாள்பட்ட தலைவலி குணமாகும்.
- திருநீற்றுப் பச்சிலையைக் கல் உப்பு சேர்த்துக் கசக்கிப் பிழிந்தால் சாறு வரும். அந்தச் சாற்றை மூக்கில் சில துளிகளைத் தினமும் விட்டுக்கொண்டால் ஒற்றைத் தலைவலி குணமாகும்.
- திருநீற்றுப் பச்சிலையை நன்றாகக் கழுவி சுத்தம் செய்து , அம்மியில் வைத்து நன்றாக அரைத்து சிறு உருண்டையாகச் செய்து வைத்துக்கொண்டு பிரசவ காலத்தில் சாப்பிட்டு வந்தால் சுகப்பிரசவம் ஆகும்.
- திருநீற்றுப் பச்சிலைச் சாற்றில் சீரகம் , சோம்பு இவை இரண்டையும் சம அளவு
- (20 கிராம்) எடுத்து ஊறவைத்து , காயவைத்துப் பொடி செய்து , தினமும் இரண்டு கிராம் அளவுக்குச் சாப்பிட்டு வந்தால் ரத்தத்தில் உள்ள விஷக் கழிவுகள் அழியும்.
KOVAI HERBAL CARE
VEGETABLES CLINIC
கோவை பாலா ,
இயற்கை வாழ்வியல் நல ஆலோசகர் மற்றும் Foot & Auricular Therapist
Cell : 96557 58609
Covaibala15@gmail.com