உணவே மருந்து

இன்றைய மருத்துவ சிந்தனை மருதம் பட்டை

தினமணி

மருதம் பட்டை, அருகம் புல், நாவல் கொட்டை, நெல்லி, கடுக்காய், தான்றிக்காய் இவை அனைத்தையும் சம அளவு எடுத்துப் பொடி செய்து சாப்பிட்டு வந்தால் சர்க்கரை நோய் கட்டுப்படும்.

மருதம் பட்டை, ஆலம் பட்டை, அரசம் பட்டை, கருவேலம் பட்டை, கொட்டைப் பாக்கு, கிராம்பு இவை அனைத்தையும் தலா 25 கிராம் எடுத்துப் பொடி செய்து பல் துலக்கி வந்தால் பல் வலி, வாய் நாற்றம், ஈறுகளில் ரத்தம் வடிதல் போன்ற குறைபாடுகள் தீரும்.

மருதம் பட்டை, ஆவாரம் பூ, தாமரைப் பூ, தான்றிக்காய்  இவை அனைத்திலும் தலா 50 கிராம் எடுத்து தண்ணீரில் போட்டுக் கொதிக்க வைத்து வடிகட்டிக் குடித்து வந்தால் இதய நோய், இதய பலவீனம், இதய வீக்கம் போன்றவை குணமாகும்.

மருதம் பட்டை, வில்வ பட்டை இரண்டையும் சம அளவு எடுத்துப் பொடி செய்து சாப்பிட்டுவந்தால் குடல் புண், வயிற்று வலி போன்றவை குணமாகும்.

மருதம் பட்டை (100கிராம்), நிலவேம்பு (25கிராம்) இவை இரண்டையும் ஒன்றாகச் சேர்த்து அரைத்து கஷாயம் வைத்துக் குடித்து வந்தால் அடிக்கடி காய்ச்சல் வராமல் தடுக்கலாம்.

மருதம் பட்டையைப் பொடி செய்து தினமும் 5 கிராம் அளவுக்குச் சாப்பிட்டு வந்தால் சிறுநீர் அதிகமாக வெளியேறுவது நிற்கும்.

மருதம் பட்டை, கடல் அழிஞ்சில் பட்டை இவை இரண்டையும் சம அளவு எடுத்து அரைத்துச் சாப்பிட்டு வந்தால் சர்க்கரை நோய் குணமாகும்.

KOVAI  HERBAL CARE
கோவை பாலா ,
இயற்கை வாழ்வியல் நல  ஆலோசகர் மற்றும்  Foot and Hand Reflexologist
Cell  :  96557 58609
Covaibala15@gmail.com

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அன்னூரில் ரூ.1.50 கோடி திருட்டு? குற்றவாளி கைதான பிறகு தெரியவந்த உண்மை!

வாக்குச் செலுத்தாவிட்டால் தண்டனை: நடிகர் பரிந்துரை!

சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து எரித்த சகோதரர்களுக்கு மரண தண்டனை!

உத்தமர் கோயிலில் பிச்சாண்டேஸ்வரர் திருவீதி உலா!

முட்டுக்காடு ‘மிதக்கும் உணவகக் கப்பல்’ தயார்! ஜூன் மாதம் திறப்பு விழா!!

SCROLL FOR NEXT