உணவே மருந்து

இன்றைய மருத்துவ சிந்தனை வெண்தாமரை

வெண்தாமரையைக் கஷாயம் காய்ச்சிக் குடித்துவந்தால் கல்லீரல் வீக்கம் குணமாகும்

தினமணி

வெண்தாமரையைக் கஷாயம் காய்ச்சிக் குடித்துவந்தால் கல்லீரல் வீக்கம் குணமாகும்.

வெண்தாமரை, நன்னாரி, வெட்டிவேர் இவை மூன்றையும் சம அளவு எடுத்து பொடி செய்து ஐந்து கிராம் அளவுக்கு எடுத்து சுடுநீரில் கலந்து குடித்து வந்தால் சிறுநீர் தாராளமாகப் பிரியும்.

வெண்தாமரையுடன் மஞ்சள்தூள் (சிறிதளவு) சேர்த்து கஷாயம் வைத்து இரவு படுக்கும் பொழுது குடித்து வந்தால் நன்றாகத் தூக்கம் வரும்.

வெண்தாமரை, சுக்கு, ஏலக்காய், ஒரிதழ் தாமரை அனைத்தையும் சம அளவு எடுத்துப் பொடி செய்து, தினமும் இரண்டு கிராம் பொடியை தினமும் காலை மாலை என இருவேளையும் சாப்பிட்டு வந்தால் இதய நோய்கள் அனைத்தும் குணமாகும்.

வெண்தாமரை, ஆவாரம் பூ இவை இரண்டையும் சம அளவு எடுத்துப் பொடி செய்து சாப்பிட்டு வந்தால் வெட்டைச்சூடு தணியும்.

வெண்தாமரைப்பூ,இலை,தண்டு, கிழங்கு ஆகியவற்றை தலா 100 கிராம் எடுத்து எடுத்து அதனை நன்றாக சாறு பிழிந்து முக்கால்கிலோ நல்லெண்ணையில் கலந்து அடுப்பில் கொதிக்க வைக்கவும். நன்றாக கொதித்த உடன் அதனை இறக்கி ஆற வைத்து காற்றுப்புகாத பாட்டிலில் அடைத்து வைக்கவும். தினமும் இதனை தலைக்கு தேய்த்து ஊற வைத்து குளித்துவர மங்கிய கண்பார்வை தெளிவுறும்.

வெண்தாமரைப்பூக்களைப் காயப்போட்டு பொடியாக்கி வைத்துக்கொள்ளவும். தினசரி 5 டீஸ்பூன் பொடியை ஒன்றரை டம்ளர் நீரில் போட்டு அடுப்பில் வைத்து சுண்டக் காய்ச்சவேண்டும். அதனை வடிகட்டி பால் சர்க்கரை சேர்த்து தினம் இரண்டு தடவை சாப்பிட்டு வந்தால் உயர் ரத்த அழுத்தம் சீராகும்.

KOVAI HERBAL CARE
கோவை பாலா,
இயற்கை வாழ்வியல் நல  ஆலோசகர் மற்றும்  
Foot and Hand Reflexologist
Cell : 96557 58609

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ரூ.69,000 சம்பளத்தில் சுங்க அலுவலகத்தில் வேலை வேண்டுமா..?: உடனே விண்ணப்பிக்கவும்!

பஞ்சமுக ஆஞ்சனேயர் கோயிலில் அனுமன் ஜெயந்தி விழா!

அடிலெய்டு டெஸ்ட்டில் ஹெட் சதம், கேரி அரைசதம்..! 356 ரன்கள் முன்னிலையில் ஆஸி!

3-வது டெஸ்ட்: கான்வே இரட்டைச்சதம்! நியூசிலாந்து 465 ரன்கள் முன்னிலை!

எட்டிமடை எல்லை மாகாளியம்மன் கோயிலில் 10ம் ஆண்டு விழா: திரளானோர் பங்கேற்பு!

SCROLL FOR NEXT