உணவே மருந்து

இன்றைய மருத்துவ சிந்தனை: ஆதொண்டை

தினமணி

உணவிலும் மாற்றம்!!!
உடலிலும் மாற்றம்!!!!

ஆதொண்டை:

  • ஆதொண்டை இலைச் சாற்றில்  சம அளவு திப்பிலியை ஊறவைத்து , பிறகு காயவைத்துப் பொடி செய்து தினமும் இரண்டு கிராம் பொடியை தேனில் கலந்து சாப்பிட்டுவந்தால் நன்றாகப் பசி எடுக்கும்.
     
  • ஆதொண்டை வேரை இடித்து நல்லெண்ணெயில் போட்டுக் காய்ச்சி , அந்த எண்ணெய்யைத் தலையில் தேய்த்துக் குளித்துவந்தால் மூக்கடைப்பு , தொண்டைக்கட்டு , வாதக்குடைச்சல் , மண்டைக்குடைச்சல் போன்றவை குணமாகும்.
     
  • ஆதொண்டைக் காயை வற்றலாக்கி , அதை சமையலில்  சேர்த்து சாப்பிட்டுவந்தால் கப நோய்கள் அனைத்தும் குணமாகும்.
     
  • ஆதொண்டை இலையை மோர் சேர்த்து அரைத்துச் சாறு எடுத்து , தினமும் 50 மில்லி அளவுக்குக் குடித்துவந்தால் நீர்க்கட்டு உடைந்து சிறுநீர் தாராளமாகப் பிரியும்.
     
  • ஆதொண்டை இலையோடு சீரகம் சேர்த்து கஷாயம் காய்ச்சி 50 மில்லி அளவுக்கு தினமும் குடித்துவந்தால் இரைப்பை சம்பந்தப்பட்ட நோய்கள் , மந்தம் , வாந்தி , நெஞ்சுவலி போன்றவை குணமாகும்.
     

குறிப்பு : 
ஆதொண்டை கீரை, கொடி வகையை சேர்ந்தது. தடிப்பான இலைகளை கொண்டது. துளிர்விடும் பொழுது மஞ்சள் நிறமாகவும் முற்றிய இலைகள் பச்சை நிறத்திலும் இருக்கும். இக்கீரைக் கொடி வேலிகளில் படர்ந்து வளரும் தன்மையுடயது. இதன் காய்கள் இதன் இலை வடிவிலேயே இருக்கும். இக்கீரையை வீட்டிலும் வளர்க்கலாம்.


KOVAI  HERBAL CARE
கோவை பாலா ,
இயற்கை வாழ்வியல் நல  ஆலோசகர் மற்றும்  Foot and Hand Reflexologist
Cell  :  96557 58609
Covaibala15@gmail.com

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நிஜ்ஜார் கொலையில் மூவர் கைது: பாகிஸ்தானின் ஐஎஸ்ஐ உடன் தொடர்பு?

”மன்னாதி மன்னன் போல வாழ்க்கை” -பிரதமர் மோடியை விமர்சித்த பிரியங்கா காந்தி

பல கேள்விகளுக்கு பதில் கூற நேரமெடுக்கும்: ஹார்திக் பாண்டியா

தமிழகக் காவல்துறையின் இணையதளம் முடக்கம்!

மீண்டும் தெலுங்கு படத்தில் தனுஷ்?

SCROLL FOR NEXT