உணவே மருந்து

இன்றைய மருத்துவ சிந்தனை அக்ரூட்

தினமணி

அக்ரூட் பருப்பு (10), வேர்க்கடலை (10) இவை இரண்டையும் இரவில் தண்ணீரில் ஊறவைத்து, அதிகாலையில் பருப்புகளை மட்டும் சாப்பிட்டு வந்தால் விந்து உற்பத்தி அதிகரிக்கும்.

அக்ரூட் பருப்பு, சாரப் பருப்பு இவை இரண்டையும் சம அளவு எடுத்துப் பொடி செய்து, சூடான பாலில் கலந்து குடித்து வந்தால் நரம்புத் தளர்ச்சி, கை கால் நடுக்கம் போன்றவை குணமாகும்.

அக்ரூட் விதையை ஆசனவாயில் சிறிது நேரம் சொருகி வைத்துக் கொண்டால் மூல வேதனை, வலி தீரும்.

அக்ரூட் எண்ணெய்யை தினமும் 5 மில்லி அளவுக்கு சாப்பிட்டு வந்தால் மலப்புழுக்கள் சாகும்.

அக்ரூட் பருப்பு, முந்திரிப் பருப்பு, பாதாம் பருப்பு, பிஸ்தா பருப்பு, உளுந்து இவை அனைத்தையும் சம அளவு எடுத்து அரைத்துக் கோள்ளவும். இதில் காலை மாலை என இரண்டு வேளையும் ஐந்து கிராம் அளவுக்குச் சாப்பிட்டு வந்தால் தோல் நோய்கள் அனைத்தும் குணமாகும்.

அக்ரூட் பருப்பு, பேரீச்சம்பழம் இவை இரண்டையும் சம அளவு எடுத்து நன்றாக நசித்து தேனில் ஊற வைக்கவும். பின்பு இவற்றில் தினமும் பத்து கிராம் அளவுக்குச் சாப்பிட்டு வந்தால் உடல் உறுதி பெறும்.

வால்நட் எண்ணெயை தினமும் முகத்தில் தடவி மசாஜ் செய்து வந்தால், அவை சருமத்தில் உள்ள சுருக்கங்களை முற்றிலும் நீக்கி, இளமையான தோற்றத்தைத் தரும்.

KOVAI HERBAL CARE
கோவை பாலா,
இயற்கை வாழ்வியல் நல  ஆலோசகர் மற்றும்  
Foot and Hand Reflexologist
Cell : 96557 58609

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நகைத் திருடிய 2 பெண்கள் மீது வழக்குப் பதிவு

செஸ் வீரா் குகேஷுக்கு கனரா வங்கி பாராட்டு

வெப்ப அலைக்கு இளைஞா் உயிரிழந்த விவகாரம்- நேரடி வெயிலில் பணியாற்ற கூடாது: மருத்துவா்கள் அறிவுறுத்தல்

மாநகரில் மேலும் 7 சிக்னல்களில் தற்காலிகப் பந்தல்

இருசக்கர வாகனத்தில் சாகசம் செய்தவா் கைது

SCROLL FOR NEXT