விளாம் பிசினை மஞ்சள் சேர்த்து ஊறவைத்துச் சாப்பிட்டு வந்தால் வாய்ப் புண், வெள்ளைப்படுதல் குணமாகும்.
விளா ஒடு, வில்வ ஒடு, மாதுளை ஒடு, மாம்பருப்பு, மஞ்சள் அனைத்தையும் சம அளவு எடுத்துப் பொடி செய்து, தினமும் காலை மாலை என இரு வேளையும் இரண்டு கிராம் பொடியைச் சாப்பிட்டு வந்தால் சர்க்கரை நோய் குணமாகும்.
விளா ஓடு, அதிமதுரம், வெள்ளரி விதை மூன்றையும் சம அளவு எடுத்துப் பொடி செய்து, தினமும் இரண்டு கிராம் பொடியைத் தேனில் குழைத்துச் சாப்பிட்டு வந்தால் இருமல், இரைப்பு, ஆஸ்துமா போன்றவை குணமாகும்.
விளாம்பழத்தை அடிக்கடி சாப்பிட்டு வந்தால் ரத்தத்தில் உள்ள கிருமிகள் அழியும்.
விளா மர இலையை, குளிக்கும் மஞ்சளுடன் சேர்த்து அரைத்து உடல் முழுவதும் தேய்த்துக் குளித்து வந்தால் சொரி, சிரங்கு, வியர்க்குரு போன்றவை நீங்கும்.
விளா மரத்தின் பிசினை எடுத்து தண்ணீரில் கரைத்து, தெளிந்த பிறகு அந்த தண்ணீரைக் குடித்து வந்தால் சிறுநீர் எரிச்சல் தணியும்.
KOVAI HERBAL CARE
கோவை பாலா,
இயற்கை வாழ்வியல் நல ஆலோசகர் மற்றும்
Foot and Hand Reflexologist
Cell : 96557 58609