உணவிலும் மாற்றம்!!!
உடலிலும் மாற்றம்!!!!
- நெல்லிக்காய், கறிவேப்பிலை இரண்டையும் தேங்காய் எண்ணெய்யில் போட்டுக் காய்ச்சி தலையில் தேய்த்து வந்தால் முடி நரைக்காது.
- நெல்லிக்காய் பொடி , கடுக்காய் பொடி இரண்டையும் 2 கிராம் அளவு எடுத்து தேன் கலந்து சாப்பிட்டு வந்தால் சளி , மூக்கடைப்பு போன்றவை குணமாகும்.
- நெல்லிக்காய் , முருங்கைக்காய் , முள்ளங்கி இவை மூன்றையும் உணவில் அடிக்கடி சேர்த்துக் கொண்டு வந்தால் கர்ப்பிணிகளுக்குக் கை கால் வீக்கங்கள் வராமல் தடுக்கலாம்.
- நெல்லிக்காய் சாற்றில் தேங்காய் எண்ணெய் கலந்து தலையில் தேய்த்து வந்தால் முடி உதிர்வது நிற்கும்.
- நெல்லிக் கனிகளைப் பறித்து தண்ணீரில் போட்டு ஊறவைக்கவும். மறுநாள் காலை அந்தத் தண்ணீரில் எலுமிச்சம் பழத்தைப் பிழிந்து தலையில் தேய்த்துக் குளித்து வந்தால் செம்பட்டை முடி கறுப்பாக மாறும்.
- நெல்லிக்காய் சாறு , திப்பிலி பொடி , தேன் மூன்றையும் சேர்த்துக் குழைத்து நாக்கில் தடவி வந்தால் வாய்ப்புண் குணமாகும்.
- நெல்லிக்காய் சாற்றை வாயில் ஊற்றிக் கொப்பளித்து சிறிது நேரம் வாயிலேயே வைத்திருந்து துப்பினால் பல் நோய்கள் அனைத்தும் குணமாகும்.
KOVAI HERBAL CARE
VEGETABLES CLINIC
கோவை பாலா ,
இயற்கை வாழ்வியல் நல ஆலோசகர் மற்றும் Foot & Auricular Therapist
Cell : 96557 58609
Covaibala15@gmail.com