உணவிலும் மாற்றம்!!!
உடலிலும் மாற்றம்!!!!
- நித்திய கல்யாணி பூவை எடுத்து கஷாயம் வைத்து தினமும் நான்கு வேளைகள என 25 மிலி அளவு சாப்பிட வேண்டும் அல்லது வேரை காயவைத்து அவற்றை தூள் செய்து வைத்துக் கொண்டு தினமும் ஒரு தேக்கரண்டி அளவு சாப்பிட்டு பின்பு வெந்நீர் குடித்துவந்தால் சிறுநீர் பாதையில் ஏற்படும் பிரச்சனைகள் குணமாகும் வேண்டும்.
- நித்தியகல்யாணி வேரைத் தூள் செய்து தினமும் ஒரு சிட்டிகை அளவு சுடுநீரில் கலந்து உள்ளுக்குச் சாப்பிட வேண்டும். இவ்வாறு ஒரு நாளைக்கு மூன்று முறைகள் ஒரு வாரம் வரை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் சர்க்கரை நோய் கட்டுப்படும்.
- நித்திய கல்யாணி பூ (10) , சீரகம் ஒரு ஸ்பூன் இவை இரண்டையும் ஒரு டம்ளர் நீர்விட்டு கொதிக்க வைக்கவும். பின்பு வடிகட்டி குடித்துவந்தால் சர்க்கரையின் அளவு குறையும். ரத்த அழுத்தம் சீராகும். நாள்பட்ட புண்கள் சீக்கிரம் ஆறும்.
- நித்திய கல்யாணி பூ(10) , கருஞ்சீரகம் கால் ஸ்பூன் இவை இரண்டையும் ஒரு டம்ளர் அளவுக்கு நீர்விட்டு கொதிக்க வைக்கவும். இதை வடிகட்டி குடித்துவந்தால் சீல் பிடித்த புண்கள், ஆறாத புண்கள் விரைவில் குணமாகும். புற்றுநோயாளிகள் இந்த தேனீரை எடுக்கலாம். பல்வேறு மருத்துவ குணங்களை கொண்ட கருஞ்சீரகம் உடலினுள் இருக்கும் நச்சுக்களை வெளியேற்றும்.
- நித்திய கல்யாணி இலையை நன்றாக பசையாக்கி(100 மில்லி) அளவுக்கு எடுத்து அதனுடன் தேங்காய் எண்ணெய் (250 மில்லி) இரண்டையும் சேர்த்து தைலப்பதத்தில் காய்ச்சவும். பின்பு ஆறவைத்து வடிகட்டி புண்கள் மேலே பூசிவந்தால் நல்ல பலன் கிடைக்கும். சீல் பிடித்த, புரையோடிய மற்றும் ரத்தம் கசிகின்ற புண்கள் விரைவில் குணமாகும்.
KOVAI HERBAL CARE
கோவை பாலா ,
இயற்கை வாழ்வியல் நல ஆலோசகர் மற்றும் Foot and Hand Reflexologist
Cell : 96557 58609
Covaibala15@gmail.com