முகப்பு
உணவே மருந்து

இன்றைய மருத்துவ சிந்தனை: மங்குஸ்தான் பழம்

வாய் துர்நாற்றம் நீங்க

Updated On : 4 டிசம்பர், 2017 at 9:20 AM
பகிர்:

உணவிலும் மாற்றம்!!!
உடலிலும் மாற்றம்!!!!


மங்குஸ்தான் பழம்:
 

  • உடல் சூடு , சீதபேதி , வயிற்று வலி அனைத்தும் குணமாக மங்குஸ்தான் பழத்தின் மேல் தோலை சுட்டு அல்லது பச்சையாக அரைத்து அதனுடன் தேன் கலந்து சாப்பிட்டு வந்தால் சீதபேதி , உடல் சூடு , வயிற்றுவலி ஆகியவை உடனே குணமாகும்.
  • வாய் துர்நாற்றம் நீங்க மங்குஸ்தான் பழத்தை நன்கு சுவைத்து சாப்பிட்டு, அல்லது அதன் தோலை காயவைத்து பொடி செய்து தேன்கலந்து சாப்பிட்டு வந்தால் வாய் துர்நாற்றம் நீங்கும்.
  • மூலநோய் குணமாக மங்குஸ்தான் பழத்தை தினந்தோறும் சாப்பிட்டு வந்தால் நாம் உண்ணும் உணவானது செரிமானம் ஆகாமல் அசீரணக் கோளாறு ஏற்பட்டு அதனால் வாயு சீற்றமாகி கீழ் நோக்கி மூலப் பகுதியை பாதிக்கிறது. இதனால் மூலத்தில் புண் ஏற்படுகிறது. மூலநோய் விரைவில் குணமாக எளிதில் சீரணமாகக் கூடிய உணவுகளை உண்பது நல்லது. அதோடு மங்குஸ்தான் பழத்தை சாப்பிட்டு வந்தால் மூலநோயால் ஏற்பட்ட பாதிப்புகள் குறையும்.
  • மாதவிலக்கு காலங்களில் உண்டாகும் அதிக இரத்தப்போக்கு குறைய மங்குஸ்தான் பழத்தின் தோலை காய வைத்து பொடிசெய்து பாலில் கலந்து சாப்பிட்டு வந்தால்  மாதவிலக்கு காலங்களில் பெண்களுக்கு ஏற்படும் அதிக இரத்தப் போக்கை குறைக்கும்.
  • பிற பயன்கள் மங்குஸ்தான் பழத்தை தினந்தோறும் சாப்பிட்டு வந்தால் சிறுநீரை பெருக்கும், இருமலை தடுக்கும் , சூதக வலியை குணமாக்கும் , தலைவலியை போக்கும், நாவறட்சியை தணிக்கும் .
     

KOVAI  HERBAL  CARE 
VEGETABLES CLINIC

கோவை பாலா ,
இயற்கை வாழ்வியல் நல  ஆலோசகர் மற்றும்  Foot & Auricular Therapist
Cell  :  96557 58609
Covaibala15@gmail.com

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.