உணவிலும் மாற்றம்!!!
உடலிலும் மாற்றம்!!!!
- குடற் புண் , தொண்டைப் புண் , ஆசணப் புண் குணமாக உலர்ந்த பிரண்ட இலையை (100கிராம்), சுக்கு (10 கிராம்), மிளகு(10 கிராம்) ஆகியவற்றுடன் சேர்த்துப் பொடியாக்கி தினமும் காலையில் 2 கிராம் அளவிற்கு சாப்பிட்டு வந்தால் குடற் புண் , தொண்டைப் புண் , ஆசனப் புண் போன்ற அனைத்தும் குணமாகும்.
- மூட்டு வலி , மூட்டுத் தேய்வு , இடுப்பு வலி நீங்க பிரண்டை இலை , முடக்கத்தான் இலை ,சீரகம் மூன்றையும் தலா 10 கிராம் அளவு எடுத்து அரைத்து காலையில் சாப்பிட்டு வந்தால் மூட்டூ வலி , மூட்டுத் தேய்வு , இடுப்பு வலி போன்ற குறைகள் தீரும்.
- மாதவிலக்குப் பிரச்சனை தீர பிரண்டையை இடித்துச் சாறு எடுத்து, அதில் சிறிது பெருங்காயம் சேர்த்துச் சாப்பிட்டு வந்தால் மாதவிலக்குப் பிரச்சனைகள் சரியாகும்.
- இளைத்த உடல் பெருக்க பிரண்டையைக் கணு மற்றும் நார் நீக்கி ,நெய்யில் வதக்கி ,மிளகு ,உப்பு சேர்த்துச் சாப்பிட்டு வந்தால் இளைத்த உடல் பெருக்கும்.
- இதயம் சார்ந்த பிரச்சனை தீர பிரண்டைத் தண்டுடன் , வாதநாராயணன் இலை ,பூண்டு ,மிளகு ,மஞ்சள் ஆகியவற்றைச் சேர்த்துக் கஷாயமாக்கி குடித்து வந்தால் இதய நோய்கள் குணமாகும்.
- பித்த மயக்கம் , உடல் எரிச்சல் நீங்க பிரண்டை இலையுடன் இஞ்சி ,பூண்டு சேர்த்து துவையல் செய்து சாப்பிட்டு வந்தால் பித்த மயக்கம் , உடல் எரிச்சல் போன்றவை விலகும்.
KOVAI HERBAL CARE
VEGETABLES CLINIC
கோவை பாலா ,
இயற்கை வாழ்வியல் நல ஆலோசகர் மற்றும் Foot & Auricular Therapist
Cell : 96557 58609
Covaibala15@gmail.com