உணவே மருந்து

தீராத மலச்சிக்கலைத் தீர்க்கும் வழி

முதலில் முளைக்கீரையை அலசி ஆய்ந்து நறுக்கி வைத்துக் கொள்ளவும்

கோவை பாலா

முளைக் கீரை கருத்தக்கார் நொய்யரிசிக் கஞ்சி

தேவையான பொருட்கள்

முளைக் கீரை -  ஒரு கட்டு
கருத்தக்கார் அரிசி  -  100  கிராம்
எள்ளு -  15 கிராம்
கொள்ளு  -  50  கிராம்

செய்முறை

  • முதலில் முளைக்கீரையை அலசி ஆய்ந்து நறுக்கி வைத்துக் கொள்ளவும்.
  • எள்ளு மற்றும் கொள்ளுவை நன்றாக சுத்தம் செய்து வாணலியில் போட்டு வறுத்து வைத்துக் கொள்ளவும்.
  • கருத்தக்கார் அரிசியை ஒன்றிரண்டாக உடைத்து நொய்யாக்கி ஒரு பாத்திரத்தில் போட்டு தண்ணீர் ஊற்றி வேக வைக்கவும்.
  • ஒரளவுக்கு அரிசி வெந்ததும் நறுக்கி வைத்துள்ள முளைக்கீரை மற்றும் வறுத்து வைத்துள்ள எள்ளு , கொள்ளு ஆகியவற்றைச்  சேர்த்து தேவையான அளவு உப்பு போட்டு நன்கு வேக வைத்து கஞ்சி பதம் வந்தவுடன் இறக்கி வைத்து குடிக்கவும்.

பயன்கள் 

  • இந்தக் கஞ்சி தீராத மலக்கட்டை உடைத்து மலம் எளிதாக வெளியேற்றி  மலச்சிக்கலை போக்க உதவும் ஆரோக்கியமானக் கஞ்சி.
  • மலச்சிக்கல் உள்ளவர்களுக்கு வரப்பிரசாதமாக விளங்கும் கஞ்சி.

படுக்கப் போகும் முன்
 
வெற்றிலை (2), மிளகு(2) , உலர் திராட்சை (5) இவை மூன்றையும் சேர்த்து  தினமும் படுக்கப்போகும் முன்  வாயில் போட்டு மென்று தின்று முழுங்கவும்.

குறிப்பு
 
அனைத்து காய்களையும் , கீரைகளையும் நீராவியில் வேகவைத்து   உணவாக சாப்பிட்டு வரவும். பச்சை மிளகாய்க்கு மாற்றாக  இஞ்சியையும் வர மிளகாய்க்கு மாற்றாக  மிளகையும் பயன்படுத்தவும்.

KOVAI  HERBAL  CARE VEGETABLES CLINIC
கோவை பாலா,

இயற்கை வாழ்வியல் நல  ஆலோசகர் மற்றும்  காய்கறி சிகிச்சையாளர்.
Cell  :  96557 58609, 73737 10080
        Covaibala15@gmail.com

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

போலீஸாருக்கு எஸ்.பி. பாராட்டு

நெல்லையில் இளைஞருக்கு அரிவாள் வெட்டு

பழங்கனாங்குடியில் ரூ.1.50 கோடியில் புதிய பாலம் கட்ட அடிக்கல்

வெள்ளை யானை வாகனத்தில் இரணியம்மன்

திருவானைக்காவல் கோயிலில் தோ்கள் வெள்ளோட்டம்! அம்மன் தேரின் அச்சாணி மீண்டும் பழுது!

SCROLL FOR NEXT