குடற்புண்களை குணப்படுத்தும் மருந்து
முதலில் கீரையை நன்கு அலசி ஆய்ந்து நறுக்கி வைத்துக் கொள்ளவும்.
மணத்தக்காளிக் கீரை சூப்
தேவையான பொருட்கள்
மணத்தக்காளிக் கீரை - ஒரு கட்டு
மிளகு - 10
சீரகம் - ஒரு ஸ்பூன்
பூண்டு - 10 பல்
இஞ்சி - ஒரு துண்டு
தனியா - ஒரு ஸ்பூன்
வெங்காயம் - 50 கிராம்
வெந்தயம் - அரை ஸ்பூன்
மஞ்சள், உப்பு - தேவையான அளவு
பெருங்காயம் - தேவையான அளவு
Advertisement
செய்முறை
- முதலில் கீரையை நன்கு அலசி ஆய்ந்து நறுக்கி வைத்துக் கொள்ளவும்.
- வெங்காயத்தை நறுக்கிக் கொள்ளவும்.
- வெந்தயத்தை வறுத்துக் கொள்ளவும்.
- ஒரு பாத்திரத்தில் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி அதில் நறுக்கி வைத்துள்ள கீரையை போடவும்.
- பின்பு அதில் மிளகு, சீரகம், பூண்டு, இஞ்சி, தனியா, வெந்தயம் ஆகியவற்றைத் தட்டி கீரையுடன் சேர்க்கவும்.
- நறுக்கி வைத்துள்ள வெங்காயம், மஞ்சள், உப்பு, பெருங்காயம் ஆகியவற்றைச் சேர்த்து நன்கு கொதிக்க வைத்து இறக்கி வைத்து குடிக்கவும்.
பலன்கள்
இந்த சூப்பை குடற்புண்களால் பாதிக்கப்பட்டவர்கள் தொடர்ந்து குடித்து வந்தால் குடற்புண்களை ஆற்றுவதில் இதற்கு மிஞ்சிய மருந்தே இல்லை. உணவும் இல்லை.
கோவை பாலா
இயற்கை வாழ்வியல் நல ஆலோசகர் மற்றும் காய்கறி சிகிச்சையாளர்.
Cell : 96557 58609, 73737 10080
Covaibala15@gmail.com