உணவே மருந்து

காசநோயை குணப்படுத்த உதவும் ஆரோக்கியமான சூப்

முதலில் பொன்னாங்கண்ணிக் கீரையை ஆய்ந்து நன்கு கழுவி பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.

கோவை பாலா


 
பொன்னாங்கண்ணிக் கீரை சூப்

தேவையான பொருட்கள்

பொன்னாங்கண்ணிக் கீரை  - 2 கட்டு
தக்காளி -  2
வெங்காயம் -   2
பூண்டு  -   5  பல்
சீரகம், மிளகு -  தேவையான அளவு
கறிவேப்பிலை  -  சிறிதளவு
கொத்தமல்லி இலை  - சிறிதளவு
வெண்ணெய் -  50 கிராம்
மைதா மாவு  -   2  ஸ்பூன்
எலுமிச்சம் பழச் சாறு   -  ஒரு ஸ்பூன்

செய்முறை

  • முதலில் பொன்னாங்கண்ணிக் கீரையை ஆய்ந்து நன்கு கழுவி பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
  • தக்காளி, வெங்காயம் ஆகியவற்றை நறுக்கி வைத்துக் கொள்ளவும்.
  • ஒரு வாய் அகன்ற பாத்திரத்தில் ஒரு ஸ்பூன் வெண்ணெய் போட்டு அடுப்பில் வைக்கவும்.
  • வெண்ணெய் நன்கு உருகியதும் அதில் பூண்டு, மிளகு, சீரகம், கறிவேப்பிலை ஆகியவற்றைப் போட்டுத் தாளித்து பின்பு அதில் நறுக்கிய வைத்துள்ள வெங்காயம், தக்காளி, கீரை, கொத்தமல்லி இலை அனைத்தையும் சேர்த்து வதக்கிக் கொள்ளவும்.
  • பின்பு அதில் ஒரு லிட்டர் தண்ணீர் சேர்த்து 20 நிமிடம் கொதிக்கவிட்டு பிறகு அதில் எலுமிச்சம்பழச் சாறு விட்டு இறக்கி வடிகட்டவும்.
  • இறுதியில் ஒரு வாணலியில் சிறிதளவு வெண்ணெய் போட்டு உருகியதும் மைதா மாவைத் தூவவும். சற்று சிவந்ததும் வடிகட்டி வைத்துள்ள சூப்பை அதில் ஊற்றி தேவையான அளவு உப்பு சேர்த்து ஒரு கொதிக்க வைத்து இறக்கி வைத்துக் கொள்ளவும்.

பலன்கள் - இந்த சூப்பை  நாட்பட்ட இருமல் , உடல் உஷ்ணம் சார்ந்த குறைபாடு உள்ளவர்கள் மற்றும் காசநோயால்  பாதிக்கப்பட்டவர்களுக்கு உகந்த உன்னதமான சூப்.
 
கோவை பாலா 
இயற்கை வாழ்வியல் நல  ஆலோசகர் மற்றும்  காய்கறி சிகிச்சையாளர்.
Cell : 96557 58609, 73737 10080
Covaibala15@gmail.com

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

முதல் டி20: இந்தியாவுக்கு 122 ரன்கள் இலக்கு நிர்ணயித்த இலங்கை!

டெவான் கான்வேவை பாராட்டி அஸ்வின் வெளியிட்ட அருமையான பதிவு!

பனிமூட்டம் எதிரொலி: தில்லியில் நூற்றுக்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து!

எஸ்.ஐ.ஆர். மூலம் குறுக்குவழியில் வெல்ல முயற்சி: மு.க. ஸ்டாலின்

6 முன்னணி நிறுவனங்களின் சந்தை மதிப்பு ரூ.75,257 கோடியாக உயர்வு!

SCROLL FOR NEXT