அகத்திக் கீரை - ஒரு கட்டு
தக்காளி - 3
வெங்காயம் - 2
கொத்தமல்லித் தழை - ஒரு கைப்பிடி
மிளகுத் தூள் - ஒரு ஸ்பூன்
மைதா மாவு - 3 ஸ்பூன்
வெண்ணெய் - 50 கிராம்
- முதலில் கீரையைச் சுத்தம் செய்து ஆய்ந்து கொள்ளவும்.
- வெங்காயம் மற்றும் தக்காளியை நறுக்கிக் கொள்ளவும்.
- பாத்திரத்தில் 1 லிட்டர் தண்ணீர் ஊற்றி அதில் கீரையைப் போட்டு நன்கு வேக வைத்து இறக்கி சாறை மட்டும் வடிகட்டிக் கொள்ளவும்.
- வாணலியில் வெண்ணெய்யை போட்டு உருக்கி அதில் நறுக்கிய வெங்காயம், தக்காளி ஆகியவற்றைப் போட்டு வதக்கி மிளகுத் தூள் கலந்து, வடித்து வைத்துள்ள சாறுடன் சேர்த்துக் கொள்ளவும்.
- அடுத்து வாய் அகலமான பாத்திரத்தில் சிறிது வெண்ணெய் விட்டு உருக்கி அதில் மைதா மாவைத் தூவி கிளறி, நன்கு சிவந்ததும் ஏற்கனவே தயாரித்துள்ள கீரைசாறையும் சேர்த்து, உப்புப் போட்டு ஐந்து நிமிடம் கொதிக்க வைத்து இறக்கவும்.
- இந்த சூப் பலவிதமான நோய்களை குணப்படுத்தும் அருமருந்து .
- இதனை அனைவரும் வாரத்திற்கு இரண்டு அல்லது மூன்று நாட்களாவது தொடர்ந்து குடித்து வந்தால், பலவிதமான நோய்களை விரட்டி உடலின் ஆரோக்கியம் மேம்படும்.
வெற்றிலை (2), மிளகு(2), உலர் திராட்சை (5) இவை மூன்றையும் சேர்த்து தினமும் படுக்கப் போகும் முன் வாயில் போட்டு நன்றாக மென்று உண்ணவும்.
- அனைத்து காய்களையும், கீரைகளையும் நீராவியில் வேகவைத்து உணவாக சாப்பிட்டு வரவும்.
- பச்சை மிளகாய்க்கு மாற்றாக இஞ்சியையும், வரமிளகாய்க்கு மாற்றாக மிளகையும் பயன்படுத்தவும்.
கோவை பாலா
இயற்கை வாழ்வியல் நல ஆலோசகர் மற்றும் காய்கறி சிகிச்சையாளர்.
Cell : 96557 58609, 73737 10080
Covaibala15@gmail.com