உணவே மருந்து

ஆண்மை சக்தி, நீடித்த போகம் மற்றும் உடல் வலு பெற உதவும் சூரணம்!

கானாம் வாழைக் கீரையை வாங்கி சுத்தப்படுத்தி நிழலில் உலர வைத்து எடுத்துக் கொள்ளவும்

கோவை பாலா

கானாம் வாழைக் கீரை சூரணம்

தேவையான பொருட்கள்

கானாம் வாழைக் கீரை - அரை கிலோ (நிழலில் உலர்த்தியது)
முந்திரிப் பருப்பு - அரை கிலோ

செய்முறை : கானாம் வாழைக் கீரையை வாங்கி சுத்தப்படுத்தி நிழலில் உலர வைத்து எடுத்துக் கொள்ளவும். முந்திரியை லேசாக வறுத்துக் கொள்ளவும். இரண்டையும் ஒன்றாக கலந்து மிக்ஸியில் போட்டு அரைத்து பொடியாக்கிக வைத்துக் கொள்ளவும்.

பலன்கள் : இந்தப் பொடியை தினமும் காலை மற்றும் மாலை என இரு வேளையும் தலா ஒரு ஸ்பூன் அளவு எடுத்து தேனில் குழைத்து அல்லது வெதுவெதுப்பான தண்ணீரில் கலந்தோ சாப்பிட்டு வந்தால் ஆண்மையில் எழுச்சி உண்டாகும். நீடித்த போகம் மற்றும் உடலும் வலு பெறும் அற்புத சூரணமாக விளங்கும்.

இரவு படுக்கப் போகும் முன் வெற்றிலை (2), மிளகு(2), உலர் திராட்சை (5) இவை மூன்றையும் சேர்த்து  தினமும் படுக்கப் போகும் முன் வாயில் போட்டு மென்று தின்று முழுங்கவும்.

குறிப்பு : அனைத்து காய்களையும், கீரைகளையும் நீராவியில் வேக வைத்து உணவாக சாப்பிட்டு வரவும். பச்சை மிளகாய்க்கு மாற்றாக இஞ்சியையும் வர மிளகாய்க்கு மாற்றாக மிளகையும் பயன்படுத்தவும்.

கோவை பாலா
இயற்கை வாழ்வியல் நல ஆலோசகர்
96557 58609 / Covaibala

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மதிமுக, மநீம, மமக உடன் இன்று திமுக பேச்சுவார்த்தை!

டிரம்ப் இல்லத்தில் துப்பாக்கியுடன் அத்துமீறி நுழைந்த இளைஞா் சுட்டுக் கொலை

இன்று வெற்றி யாருக்கு? தினப்பலன்கள்!

பெரம்பூரில் விஜய் போட்டியிட தவெக செயல்வீரா்கள் கூட்டத்தில் தீா்மானம்!

திமுகவின் தொகுதிப் பங்கீட்டுக் கணக்கு!

SCROLL FOR NEXT