முகப்பு
உணவே மருந்து

நாட்பட்ட சைனஸ், சளி, கபம் ஆகியவற்றை முற்றிலும் குணப்படுத்தும் சூப்

முதலில் தூதுவளை இலையை ஆய்ந்து பொடிப் பொடியாக அரிந்து அத்துடன் துவரம் பருப்பு, பூண்டு

Updated On : 23 ஜூலை 2019, 10:49 am IST
பகிர்:

தூதுவளை சூப்
 
தேவையான பொருட்கள்

 
தூதுவளை இலை - 100 கிராம்
வெங்காயம் - 25 கிராம்
தக்காளி - 2 
துவரம் பருப்பு - 50 கிராம்
பட்டை, இஞ்சி - ஒரு துண்டு
பூண்டு - 5 பல்
மஞ்சள் - ஒரு துண்டு
தனியா - ஒரு ஸ்பூன்
சோம்பு , சீரகம் , ஒமம் - 10 கிராம் (தலா)
தேங்காய்த் துருவல் - சிறிதளவு
உப்பு - தேவையான அளவு

செய்முறை

முதலில் தூதுவளை இலையை ஆய்ந்து பொடிப் பொடியாக அரிந்து அத்துடன் துவரம் பருப்பு, பூண்டு சேர்த்து வேக வைத்து இறக்கி நன்கு கடைந்து வைத்துக் கொள்ளவும். பிறகு வாணலியில் தனியா, சோம்பு, சீரகம், ஒமம், தேங்காய்த் துருவல், பட்டை, இஞ்சி, மஞ்சள் ஆகியவற்றைச் சேர்த்து வறுத்துக் கொள்ளவும். சிறிது எண்ணெய்யில் வெங்காயம், தக்காளி ஆகியவற்றை நறுக்கிப் போட்டு நன்கு வதக்கிய பின்பு அதனுடன் தூதுவளை மசியலையும், வறுத்து வைத்துள்ள பொருட்களையும் சேர்த்து ஒரு கொதிநிலை வந்ததும் தேவையான அளவு உப்பு சேர்த்து இறக்கி விடவும்.

Advertisement

யன்கள் : இந்த தூதுவளை சூப்பை நாட்பட்ட சைனஸ், சளி, கபம் பிரச்சனையால் அவதிப்படுபவர்களுக்கு மிகச் சிறந்த மருந்தாக அமையும். குறைபாடும் சீராகும்.

இரவு படுக்கப் போகும் முன் வெற்றிலை (2), மிளகு (2), உலர் திராட்சை (5) இவை மூன்றையும் சேர்த்து தினமும் படுக்கப் போகும் முன் வாயில் போட்டு மென்று தின்று முழுங்கவும்.

குறிப்பு : அனைத்து காய்களையும், கீரைகளையும் நீராவியில் வேக வைத்து உணவாக சாப்பிட்டு வரவும். பச்சை மிளகாய்க்கு மாற்றாக இஞ்சியையும் வர மிளகாய்க்கு மாற்றாக மிளகையும் பயன்படுத்தவும்.

கோவை பாலா
இயற்கை வாழ்வியல் நல ஆலோசகர்
96557 58609 / Covaibala

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.