FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
உணவே மருந்து

புற்றுநோயாளிகளுக்கு ஆரோக்கிய துணை இது!

கேரட்டை நன்றாக கழுவி சிறுசிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.

Updated On : 15 ஜூன் 2019, 11:11 am IST
பகிர்:

கேரட் துவையல்

தேவையான பொருட்கள்

கேரட் - 100 கிராம்
கடலைப் பருப்பு - 30 கிராம்
சிறு பருப்பு - 20 கிராம்
மிளகு - 10 கிராம்
உப்பு - தேவையான அளவு

Advertisement

Advertisement

செய்முறை : கேரட்டை நன்றாக கழுவி சிறுசிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். கடலைப் பருப்பு மற்றும் சிறுபருப்பை வறுத்துக் கொள்ளவும். பின்பு கேரட்டுடன் பருப்பு மற்றும் மிளகு, உப்பு சேர்த்து நன்றாக அரைத்து துவையலாக்கிக் கொள்ளவும்.

பயன்கள் : இந்த துவையலை தினமும் உணவோடு சேர்த்து சாப்பிட்டு வந்தால் ரத்தசோகை நீங்கும். குடல் புண்ணை ஆற்றும் ஆற்றல் இந்த துவையலுக்கு உண்டு. மேலும் புற்றுநோயாளிகளுக்கு மிகச் சிறந்த துணை உணவாக தினமும் உணவில் சேர்த்துக் கொள்ளவும்.

இரவு படுக்கப் போகும் முன் வெற்றிலை (2), மிளகு(2), உலர் திராட்சை (5) இவை மூன்றையும் சேர்த்து தினமும் படுக்கப் போகும் முன் வாயில் போட்டு மென்று தின்று முழுங்கவும்.

குறிப்பு : அனைத்து காய்களையும், கீரைகளையும் நீராவியில் வேக வைத்து உணவாக சாப்பிட்டு வரவும். பச்சை மிளகாய்க்கு மாற்றாக இஞ்சியையும் வர மிளகாய்க்கு மாற்றாக மிளகையும் பயன்படுத்தவும்.

கோவை பாலா
இயற்கை வாழ்வியல் நல ஆலோசகர்
96557 58609 / Covaibala15@gmail.com

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments