சர்க்கரை நோயாளிகளுக்கு உகந்த சத்தான சுவையான கஞ்சி
இந்த கஞ்சியை சர்க்கரை நோயாளிகள் மற்றும் அனைவரும் உண்ணுவதற்கு உகந்த சுவையான கஞ்சி.
பனிவரகு வெண்டைக்காய் கஞ்சி
தேவையான பொருட்கள்
பனிவரகு - 100 கிராம்
கேரட் - 15 கிராம்
இளம் பிஞ்சு வெண்டைக்காய் - 5
மிளகுத் தூள் - 5 கிராம்
தேங்காய்ப் பால் - 100 மி.லி
எண்ணெய் - தேவையான அளவு,
உப்பு - தேவையான அளவு
பெருங்காயத் தூள் - சிறிதளவு
கறிவேப்பிலை - தேவையான அளவு
கடுகு - அரை தேக்கரண்டி
சீரகம் - அரை தேக்கரண்டி
பூண்டுப் பல் - 3 பல்
செய்முறை
Advertisement
- கேரட்டை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
- வெண்டைக்காயை நன்றாக கழுவி நறுக்கிக் கொள்ளவும்.
- வெண்டைக்காய் மற்றும் கேரட்டை நீராவியில் வேக வைத்துக் கொள்ளவும்
- பனிவரகு அரிசியை இரண்டு மணி நேரம் ஊறவைக்கவும்.
- ஒரு பாத்திரத்தில் தேவையான அளவு எண்ணெய் ஊற்றி சூடானதும் அதில் கடுகு, சீரகம், பெருங்காயத் தூள், பூண்டுப் பல் சேர்த்து வதக்கி கொள்ளவும்.
- பின்பு தேவையான அளவு தண்ணீர் ஊற்றி கொதிக்க வைக்கவும்.
- நன்கு கொதிக்கும் பொழுது அதில் பனிவரகு அரிசி சேர்த்து கஞ்சி பதத்தில் வந்தவுடன் நீராவியில் வேக வைத்துள்ள கேரட் மற்றும் வெண்டைக்காயை சேர்த்து கலக்கி இறக்கி கொள்ளவும்.
- அதில் தேங்காய்ப் பால் மற்றும் மிளகுத் தூளைச் சேர்த்து நன்கு கலக்கி பருகவும்.
பயன்கள்
இந்த கஞ்சியை சர்க்கரை நோயாளிகள் மற்றும் அனைவரும் உண்ணுவதற்கு உகந்த சுவையான கஞ்சி.
தினமும் இரவு படுக்கப் போகும் முன் வெற்றிலை (2), மிளகு(2), உலர் திராட்சை (5) இவை மூன்றையும் சேர்த்து வாயில் போட்டு மென்று தின்று முழுங்கவும்.
குறிப்பு : அனைத்து காய்களையும், கீரைகளையும் நீராவியில் வேக வைத்து உணவாக சாப்பிட்டு வரவும். பச்சை மிளகாய்க்கு மாற்றாக இஞ்சியையும் வரமிளகாய்க்கு மாற்றாக மிளகையும் பயன்படுத்தவும்.
கோவை பாலா
இயற்கை வாழ்வியல் நல ஆலோசகர்
96557 58609 / Covaibala15@gmail.com