உணவே மருந்து

தாய்ப்பால் நன்றாகச் சுரக்க உதவும் உணவு

தண்ணீர் விட்டான் கிழங்கை உலரவைத்து மாவாக்கிக் கொள்ளவும்.

கோவை பாலா


 தண்ணீர் விட்டான் கிழங்கு பச்சரிசி நொய்க் கஞ்சி
 
தேவையான பொருட்கள்

 
தண்ணீர் விட்டான் கிழங்கு - கால் கிலோ
பச்சரிசி - 200 கிராம்
உளுந்து - 100  கிராம்
மிளகு - 10  கிராம்
பச்சைப் பயிறு - 200 கிராம்
சீரகம் - 10  கிராம்

செய்முறை

  • தண்ணீர் விட்டான் கிழங்கை உலரவைத்து மாவாக்கிக் கொள்ளவும்.
  • உளுந்து, மிளகு, பச்சைப் பயிறு மற்றும் சீரகம் ஆகியவற்றை லேசாக வறுத்துக் கொள்ளவும்.
  • பின்பு பச்சரிசியுடன்  வறுத்து வைத்துள்ளவற்றைச் சேர்த்து அரைத்து மாவாக்கி வைத்துக்கொள்ளவும்.
  • அரைத்து வைத்துள்ள பச்சரிசி மாவு மற்றும் தண்ணீர் விட்டான் கிழங்கு மாவு இரண்டையும் ஒன்றாக கலந்து வைத்துக் கொள்ளவும்.
  • ஒரு பாத்திரத்தில் 200 மி.லி தண்ணீர் ஊற்றி சூடு படுத்தி அதில் அரைத்து வைத்துள்ள மாவில் 20 கிராம் அளவு எடுத்து கொஞ்சம் கொஞ்சமாக போட்டு நன்கு கிளறி கொதிக்க வைத்து கஞ்சியாக்கி இறக்கி வைக்கவும்.

பயன்கள்

இந்த அமிர்தமான கஞ்சியை தாய்பால் சுரப்பு இல்லாமலும், போதுமான அளவிற்கு சுரக்காமலும் உள்ள தாய்மார்கள்  இநதக் கஞ்சியை தொடர்ந்து குடித்து வந்தால் தாய்ப்பால் சுரப்பு தேவையான அளவு சுரக்கும்.

தினமும் இரவு படுக்கப் போகும் முன் வெற்றிலை (2), மிளகு(2), உலர் திராட்சை (5) இவை மூன்றையும் சேர்த்து வாயில் போட்டு மென்று தின்று முழுங்கவும்.

குறிப்பு : அனைத்து காய்களையும், கீரைகளையும் நீராவியில் வேக வைத்து உணவாக சாப்பிட்டு வரவும். பச்சை மிளகாய்க்கு மாற்றாக இஞ்சியையும் வரமிளகாய்க்கு மாற்றாக மிளகையும் பயன்படுத்தவும்.

கோவை பாலா
இயற்கை வாழ்வியல் நல ஆலோசகர்
96557 58609 / Covaibala15@gmail.com

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இஸ்ரேல் ராணுவத்தின் மூத்த வழக்கறிஞர் கைது!

ரூ. 16 லட்சம் மதிப்பிலான வீடு பரிசு! 10 மாதக் குழந்தைக்கு அடித்த ஜாக்பாட்!

ராமதாஸ் - அன்புமணி ஆதரவாளர்கள் கடும் மோதல்! உருட்டுக்கட்டைகளால் தாக்குதல்!

பொன்முடி, சாமிநாதன் திமுக துணைப் பொதுச் செயலாளர்கள்: மு.க. ஸ்டாலின்

தமிழ்நாட்டின் முறைசாரா பெண் தொழிலாளர்களின் போராட்டம்: வலுசேர்க்கும் தொழிற்சங்கம்!

SCROLL FOR NEXT