உணவே மருந்து

உங்களுக்கு பனை நுங்கு பாயாசம் பிடிக்குமா? சத்து நிறைந்த ரெஸிபி இதோ

முதலில் முந்திரி, திராட்சை, ஏலக்காய் போன்றவற்றை நெய்யில் வறுத்து பின்பு தண்ணீர் ஊற்றி கொதிக்க வைக்கவும்.

கோவை பாலா

தேவையான பொருட்கள்

தோல்நீக்கிய பனை நுங்கு  - கால் கிலோ (சிறு சிறு துண்டுகளாக்கிக் கொள்ளவும்)
வறுத்த சேமியா  - 50 கிராம்
முந்திரிப் பருப்பு  - 50 கிராம்
திராட்சை - 50 கிராம்
ஏலக்காய் - 10 கிராம்
நாட்டுச் சர்க்கரை - 100 கிராம்
தேங்காய் பால் - தேவையான அளவு

செய்முறை

முதலில் முந்திரி, திராட்சை, ஏலக்காய் போன்றவற்றை நெய்யில் வறுத்து பின்பு தண்ணீர் ஊற்றி கொதிக்க வைக்கவும்.

பின்னர் வறுத்த சேமியா மற்றும் சிறு துண்டுகளாக்கப்பட்ட பனை நுங்கு ஆகியவற்றை கொதித்த நீரில் சேர்த்து அதனுடன் நாட்டுச் சர்க்கரையையும் சேர்த்து நன்கு கிளறி பாயாசம் செய்வதை போல் தயார் செய்து இறக்கிய பின்பு தேங்காய் பாலையும் ஊற்றி நன்கு கிளறிக் கொள்ளவும் .

பயன்கள்

இந்த பாயாசத்தை தினசரி சாப்பிட்டு வந்தால் தைராய்டு குறைபாடு சீராகும் . ரத்த சோகை குணமாகும். உடல் வலிமை பெறும்.

தினமும் இரவு படுக்கப் போகும் முன் வெற்றிலை (2), மிளகு (2), உலர் திராட்சை (5) இவை மூன்றையும் சேர்த்து வாயில் போட்டு மென்று தின்று முழுங்கவும்.

குறிப்பு : அனைத்து காய்களையும், கீரைகளையும் நீராவியில் வேக வைத்து உணவாக சாப்பிட்டு வரவும். பச்சை மிளகாய்க்கு மாற்றாக இஞ்சியையும் வரமிளகாய்க்கு மாற்றாக மிளகையும் பயன்படுத்தவும்.

கோவை பாலா
இயற்கை வாழ்வியல் நல ஆலோசகர்
96557 58609 / Covaibala15@gmail.com

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அமெரிக்காவுடன் இடைக்கால வா்த்தக ஒப்பந்தம்: பேச்சுவாா்த்தை ஒத்திவைப்பு!

மாற்றம் பெறும் மதிப்பீட்டு முறை!

தமிழகத்தில் 2,506 முகாம்கள் மூலம் 3,09,707 பேருக்கு வேலைவாய்ப்பு!

தில்லியில் பயங்கரவாத தாக்குதல் சதி முறியடிப்பு: தமிழகத்தில் இருந்து 6 போ் உள்பட 8 போ் கைது!

இடையறா பயணத்தின் 'மைல்கல்' தேர்தல்!

SCROLL FOR NEXT