எலும்புருக்கி எனப்படும் T.B நோய் மற்றும் நாட்பட்ட சுரத்தையும் விரட்டும் அற்புதமான கஞ்சி
முதலில் தண்ணீர் விட்டான் கிழங்கைத் தூளாக்கிக் கொள்ளவும்.
தண்ணீர்விட்டான் கிழங்குக் கஞ்சி
தேவையான பொருட்கள்
தண்ணீர்விட்டான் கிழங்கு - 50 கிராம்
பால் - அரை லிட்டர்
நாட்டுச் சர்க்கரை - தேவையான அளவு
Advertisement
செய்முறை
- முதலில் தண்ணீர் விட்டான் கிழங்கைத் தூளாக்கிக் கொள்ளவும்.
- ஒரு பாத்திரத்தில் பாலை ஊற்றி அதில் தூளாக்கி வைத்துள்ள தண்ணீர் விட்டான் கிழங்குத் தூளை போடவும்.
- அதனை நன்கு கலக்கி அடுப்பிலேற்றி நன்கு காய்ச்ச வேண்டும்.
- பால் நன்கு காய்ந்த பிறகு தேவையான அளவு நாட்டு சர்க்கரை சேர்த்து பருகவும்.
பயன்கள்
இந்தக் கஞ்சியை எலும்புருக்கி எனப்படும் T.B நோயால் பாதிக்கப்பட்டவர்கள் தொடர்ந்து குடித்து வந்தால் அற்புதமான பலனைப் பெறலாம்.
மேலும் இந்தக் கஞ்சியை நாட்பட்ட சுரத்தினால் பாதிக்கப்பட்டவர்கள் குடித்து வந்தால் எந்த நிலையில் இருந்தாலும் குணமாக்கக் கூடிய அற்புதமான ஆற்றல் நிறைந்த உன்னதமானக் கஞ்சி.
குறிப்பு : அனைத்து காய்களையும், கீரைகளையும் நீராவியில் வேக வைத்து உணவாக சாப்பிட்டு வரவும். பச்சை மிளகாய்க்கு மாற்றாக இஞ்சியையும் வரமிளகாய்க்கு மாற்றாக மிளகையும் பயன்படுத்தவும்.
கோவை பாலா
இயற்கை வாழ்வியல் நல ஆலோசகர்
96557 58609 / Covaibala15@gmail.com