கோதுமை புழுங்கலரிசிக் கஞ்சி 
உணவே மருந்து

நீரிழிவு நோயாளிகள் உண்ணக் கூடிய உன்னதமானக் கஞ்சி

முதலில் கோதுமை மற்றும் புழுங்கலரிசியை முதல் நாள் இரவில் ஊற வைக்கவும்.

கோவை பாலா

தேவையான பொருட்கள்

கோதுமை - 50  கிராம்
புழுங்கலரிசி - 50  கிராம்
பசும் பால்  - 100 மி.லி
அக்ரூட் - 20  கிராம்
சாரைப் பருப்பு - 20  கிராம்
நெய் - 2 தேக்கரண்டி
பனங்கற்கண்டு -  தேவையான அளவு

செய்முறை

  • முதலில் கோதுமை மற்றும் புழுங்கலரிசியை முதல் நாள் இரவில் ஊற வைக்கவும்.
  • காலையில் ஊற வைத்த கோதுமை மற்றும் புழுங்கலரிசியை ஒன்றாகச் சேர்த்து அரைத்துப் பிழிந்து பால் எடுக்கவும்.
  • அக்ரூட் மற்றும் சாரைப் பருப்பு இரண்டையும் ஒரு வாணலியில் போட்டு இரண்டு தேக்கரண்டி  நெய்யை விட்டு வறுக்கவும்.
  • வறுத்து வைத்துள்ள பருப்புகளை பிழிந்து வைத்துள்ள பாலில் சிறிதளவு விட்டு அரைத்து விழுதாக்கிக் கொள்ளவும்.
  • அரைத்த விழுதை  எஞ்சியுள்ள முக்கால் பங்கு பாலில்  கலந்து கொள்ளவும்.
  • அனைத்தையும் பசும்பாலுடன் சேர்த்து அதனுடன்  தேவையான அளவு பனங்கற்கண்டு சேர்த்து குடித்து வரவும்.

பயன்கள்

இந்தக் கஞ்சியை பல வருடங்களாக நீரிழிவு குறைபாட்டால்  பாதிக்கப் பட்டவர்கள் ஒருவேளை உணவாக உண்ணுவது சிறந்த பலனைத் தரும் அற்புதமான கஞ்சி.

குறிப்பு : அனைத்து காய்களையும், கீரைகளையும் நீராவியில் வேக வைத்து உணவாக சாப்பிட்டு வரவும். பச்சை மிளகாய்க்கு மாற்றாக இஞ்சியையும் வரமிளகாய்க்கு மாற்றாக மிளகையும் பயன்படுத்தவும்.

கோவை பாலா
இயற்கை வாழ்வியல் நல ஆலோசகர்
96557 58609 / Covaibala15@gmail.com

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

போலீஸாருக்கு எஸ்.பி. பாராட்டு

நெல்லையில் இளைஞருக்கு அரிவாள் வெட்டு

பழங்கனாங்குடியில் ரூ.1.50 கோடியில் புதிய பாலம் கட்ட அடிக்கல்

வெள்ளை யானை வாகனத்தில் இரணியம்மன்

திருவானைக்காவல் கோயிலில் தோ்கள் வெள்ளோட்டம்! அம்மன் தேரின் அச்சாணி மீண்டும் பழுது!

SCROLL FOR NEXT