உணவே மருந்து

சிறுநீர் பாதையில் உண்டாகும் எரிச்சலை சீர் செய்யும் அற்புதமானக் கஞ்சி

முதலில் ஒரு பாத்திரத்தில் அரை லிட்டர் தண்ணீர் ஊற்றி அடுப்பில் வைக்கவும்.

கோவை பாலா

  
வெண் பூசணி பார்லிக் கஞ்சி

தேவையான பொருட்கள்

வெண் பூசணிக்காய் தோல், விதையுடன் நறுக்கித் துண்டாக்கியது - 100 கிராம்
பார்லி - 3 தேக்கரண்டி
தண்ணீர் - அரை லிட்டர்
உப்பு - தேவையான அளவு

செய்முறை

  • முதலில் ஒரு பாத்திரத்தில் அரை லிட்டர் தண்ணீர் ஊற்றி அடுப்பில் வைக்கவும்.
  • பின்னர் நீரில் பார்லியைப் போட்டு  வேக வைக்கவும்.
  • பார்லி நன்கு வெந்தவுடன் அத்துடன் நறுக்கி வைத்துள்ள வெண்பூசணித் துண்டுகளையும், தேவையான அளவு உப்பும் சேர்த்து நன்கு வேக வைக்கவும்.
  • நன்கு வெந்தவுடன்  இறக்கி வைத்து மிதமான சூட்டில் குடித்து வரவும்.

பயன்கள்

  • இந்தக் கஞ்சியை தொடர்ந்து 21 நாட்கள் குடித்து வந்தால் மண்ணீரல் பலப்படும்.
  • மேலும் வெயில் காலங்களில் உண்டாகும் அதிகமான உஷ்ணத்தை தடுக்கும் ஆற்றல் உள்ள கஞ்சி.
  • நீர்ச்சுருக்கு மற்றும் சிறுநீர் பாதையில் உண்டாகும் எரிச்சல் குறைபாட்டை சீர் செய்யும் அற்புதமானக் கஞ்சி.

குறிப்பு : அனைத்து காய்களையும், கீரைகளையும் நீராவியில் வேக வைத்து உணவாக சாப்பிட்டு வரவும். பச்சை மிளகாய்க்கு மாற்றாக இஞ்சியையும் வரமிளகாய்க்கு மாற்றாக மிளகையும் பயன்படுத்தவும்.

கோவை பாலா
இயற்கை வாழ்வியல் நல ஆலோசகர்
96557 58609 / Covaibala15@gmail.com

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அமெரிக்காவுடன் இடைக்கால வா்த்தக ஒப்பந்தம்: பேச்சுவாா்த்தை ஒத்திவைப்பு!

மாற்றம் பெறும் மதிப்பீட்டு முறை!

தமிழகத்தில் 2,506 முகாம்கள் மூலம் 3,09,707 பேருக்கு வேலைவாய்ப்பு!

தில்லியில் பயங்கரவாத தாக்குதல் சதி முறியடிப்பு: தமிழகத்தில் இருந்து 6 போ் உள்பட 8 போ் கைது!

இடையறா பயணத்தின் 'மைல்கல்' தேர்தல்!

SCROLL FOR NEXT