கோவக்காய் கோதுமை நொய்க் கஞ்சி
கோதுமை நொய் - 100 கிராம்
கோவக்காய் - 10
தேங்காய்ப் பால் - 50 மி.லி
கேரட் - 2
பட்டாணி - சிறிதளவு
கொத்தமல்லித் தழை - சிறிதளவு
உப்பு - தேவையான அளவு
தண்ணீர் - தேவையான அளவு
- முதலில் கோவக்காய் மற்றும் கேரட்டை நன்றாக கழுவி பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
- நறுக்கி வைத்துள்ள கோவக்காய் மற்றும் கேரட் மற்றும் பட்டாணியை நீராவியில் வேகவைக்கவும்.
- ஒரு பாத்திரத்தில் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி சூடு படுத்தவும்.
- தண்ணீர் கொதிநிலை வந்தவுடன் அதில் கோதுமை நொய் மற்றும் தேங்காய் பால் சேர்த்து கொதிக்க வைக்கவும்.
- நன்கு கஞ்சி பதம் வந்தவுடன் அதில் நீராவியில் வேக வைத்த காய்களை சேர்த்து அதில் தேவையான அளவு உப்பு சேர்த்து கலக்கி பின்பு கொத்தமல்லித் தழை சேர்த்து இறக்கி வைக்கவும்.
- இந்தக் கஞ்சியில் காய்கள் நிறைந்திருப்பதால் தாதுக்கள், விட்டமின் மற்றும் நார்ச்சத்து நிறைந்திருக்கும்.
- சத்துக்கள் நிறைந்த கஞ்சியை சர்க்கரை குறைபாடு உள்ளவர்கள் ஒரு வேளை உணவாக உட்கொண்டு வந்தால் சர்க்கரையை கட்டுக்குள் வைக்க முடியும்.
தினமும் இரவு படுக்கப் போகும் முன் வெற்றிலை (2), மிளகு(2) , உலர் திராட்சை (5) இவை மூன்றையும் சேர்த்து வாயில் போட்டு மென்று தின்று முழுங்கவும்.
குறிப்பு : அனைத்து காய்களையும், கீரைகளையும் நீராவியில் வேக வைத்து உணவாக சாப்பிட்டு வரவும். பச்சை மிளகாய்க்கு மாற்றாக இஞ்சியையும் வரமிளகாய்க்கு மாற்றாக மிளகையும் பயன்படுத்தவும்.
கோவை பாலா
இயற்கை வாழ்வியல் நல ஆலோசகர்
96557 58609 / Covaibala15@gmail.com