முகப்பு
உணவே மருந்து

பசியின்மை நீக்கி நல்ல பசியை உண்டாக்க உதவும் கசாயம்

முதலில் முளைக் கீரையை நன்கு ஆய்ந்து நறுக்கிக் கொள்ளவும்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 3:19 PM
முளைக்கீரை
பகிர்:

முளைக் கீரை பூண்டு கசாயம்

தேவையான பொருட்கள்


முளைக் கீரை         -  ஒரு கட்டு

பூண்டு.                     -   5 பல்

மிளகு.                      -  10

சீரகம்                       -   ஒரு ஸ்பூன்

சி.வெங்காயம்      -  5

மஞ்சள்.                    -  சிறிதளவு


செய்முறை
 
முதலில் முளைக் கீரையை நன்கு ஆய்ந்து நறுக்கிக் கொள்ளவும்.

பூண்டு மற்றும் மிளகை தட்டி வைத்துக் கொள்ளவும்.

சின்ன வெங்காயத்தை நறுக்கி வைத்துக் கொள்ளவும்.

ஒரு பாத்திரத்தில் 500 மி.லி அளவு தண்ணீர் ஊற்றி அதில் முளைக் கீரை, மிளகு, பூண்டு, சின்ன வெங்காயம், சீரகம் மற்றும் சிறிதளவு மஞ்சள் தூள் அனைத்தையும் சேர்த்து நன்கு கொதிக்க வைக்கவும்..

நன்கு கொதித்து பாதியாகச் சுண்டச் செய்து  இறக்கி வைத்து வடிகட்டிக் கொள்ளவும்.

பயன்கள்

இந்த கசாயத்தை பசியின்மை இல்லாதவர்கள் குடித்து வந்தால் பசியின்மையை நீக்கி நல்ல பசி உணர்வை உண்டாக்கும் அற்புத கசாயம்

வெற்றிலை (2), மிளகு(2), உலர் திராட்சை (5) இவை மூன்றையும் சேர்த்து  தினமும் படுக்கப் போகும் முன்  வாயில் போட்டு மென்று தின்று முழுங்கவும்.

குறிப்பு

அனைத்து காய்களையும், கீரைகளையும் நீராவியில் வேகவைத்து  உணவாக சாப்பிட்டு வரவும்.

பச்சை மிளகாய்க்கு மாற்றாக  இஞ்சியையும், வரமிளகாய்க்கு மாற்றாக மிளகையும் பயன்படுத்தவும்.

கோவை பாலா  
இயற்கை வாழ்வியல் நல  ஆலோசகர் மற்றும்  காய்கறி சிகிச்சையாளர்.
Cell : 96557 58609, 73737 10080
Covaibala15@gmail.com

முழு கட்டுரையைப் படிக்க →