இந்தியா

மும்பையில் ஆட்டோ ஓட்டும் தமிழரின் மகள் அகில இந்திய சி.ஏ. தேர்வில் முதலிடம்

தினமணி

மும்பையில் ஆட்டோ ஓட்டும் தமிழரின் மகள், அகில இந்திய சார்ட்டர்டு அக்கவுன்டன்சி (சி.ஏ.) தேர்வில் முதலிடம் பிடித்துள்ளார்.

தமிழ்நாட்டைச் சேர்ந்த ஜெயகுமார் பெருமாள் கடந்த சில ஆண்டுகளாக மும்பையில் தன் மனைவி, மகள் மற்றும் மகனுடன் வசித்து வருகிறார். அவர் ஆட்டோ ஓட்டுநராக இருக்கிறார். அவரது மகள் பிரேமா ஜெயகுமாரும், 22 வயது மகனும் கடந்த ஆண்டு நவம்பரில் நடைபெற்ற சி.ஏ. தேர்வில் பங்கேற்றனர். இந்நிலையில், சி.ஏ. தேர்வு முடிவுகள் திங்கள்கிழமை அறிவிக்கப்பட்டன.

அதில் பிரேமா ஜெயகுமார் முதல் இடத்தைப் பிடித்து சாதனை படைத்துள்ளார். அவர் 800க்கு 607 மதிப்பெண்களைப் பெற்றுள்ளார்.

இது குறித்து அவர் பி.டி.ஐ. செய்தியாளரிடம் கூறுகையில், ""இது எனது வாழ்நாள் சாதனை. என்னைப் பொறுத்தவரை, வெற்றிக்கான சாவி என்பது கடின உழைப்புதான். எனது இந்த வெற்றிக்கு என் பெற்றோர்தான் காரணம்.

அவர்களின் ஆதரவு மற்றும் ஆசி இல்லாமல் இந்த வெற்றி கிடைத்திருக்க வாய்ப்பில்லை. அவர்கள் என்னை எப்போதும் ஊக்கப்படுத்தி வந்தனர். எனக்காக இவ்வளவு தூரம் பாடுபட்ட அவர்களை இனி வசதியாக வாழ வைக்க விரும்புகிறேன். என் தந்தையையும், இல்லத்தரசியான தாயையும் நினைத்து பெருமைப்படுகிறேன்.

அவர்கள் எனது மற்றும் என் தம்பியின் படிப்புக்கு பணம் ஒரு தடையாக இருக்கும் நிலையை எப்போதும் ஏற்படுத்தியதில்லை'' என்று தெரிவித்தார். பிரேமாவின் சகோதரரும் சி.ஏ.வில் தேர்ச்சி பெற்றுள்ளார்.

முன்னதாக, மும்பை பல்கலைக்கழகம் நடத்திய பி.காம் மூன்றாம் ஆண்டுத் தேர்வில் பிரேமா 90 சதவீத மதிப்பெண்கள் பெற்று இரண்டாம் இடம் பிடித்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மகாராஷ்டிரம்: நக்ஸலைடுகள் மறைத்து வைத்த 9 வெடிகுண்டுகள் மீட்டு செயலிழப்பு

புதுப்பை ஞானசம்பந்தா் பள்ளி மாணவி 591 மதிப்பெண்கள் பெற்று சாதனை

பிளஸ் 2 பொதுத் தோ்வு: நம்பியூா் குமுதா மெட்ரிக். மேல்நிலைப் பள்ளி சிறப்பிடம்

தொழிலாளா்களுக்கு சுத்தமான குடிநீா் வசதி செய்து கொடுக்க அறிவுறுத்தல்

மாநகராட்சி தூய்மைப் பணியாளா்களுக்கு வேலை நேரம் மாற்றம்

SCROLL FOR NEXT