எம்.பி. பதவியையும் பன்சால் ராஜிநாமா செய்ய வேண்டும்: பாஜக
முன்னாள் ரயில்வே அமைச்சர் பவன் குமார் பன்சால் சண்டீகர் மக்களவைத் தொகுதி உறுப்பினர் பதவியிலிருந்தும் விலக வேண்டும் என பாஜக வலியுறுத்தி உள்ளது.
முன்னாள் ரயில்வே அமைச்சர் பவன் குமார் பன்சால் சண்டீகர் மக்களவைத் தொகுதி உறுப்பினர் பதவியிலிருந்தும் விலக வேண்டும் என பாஜக வலியுறுத்தி உள்ளது.
இதுதொடர்பாக, சண்டீகர் பாஜக தலைவர் சஞ்சய் தாண்டன் ஞாயிற்றுக்கிழமை கூறியது:
ரயில்வே வாரிய பதவியை பெற்றுத் தருவதற்காக ரூ.10 கோடி பேரம் பேசப்பட்டதாக முன்னாள் ரயில்வே அமைச்சர் பன்சாலின் உறவினர் விஜய் சிங்லா கைது செய்யப்பட்டுள்ளார். இதன்மூலம், தனக்கு வாக்களித்த பொதுமக்களின் நம்பிக்கையை பன்சால் இழந்துவிட்டார். எனவே, சண்டீகர் மக்களவை உறுப்பினர் பதவியையும் பன்சால் ராஜிநாமா செய்ய வேண்டும் என்றார்.
Advertisement
Advertisement
இதற்கிடையே, பாஜகவின் முன்னாள் படைவீரர் பிரிவு மற்றும் மருத்துவர்கள் பிரிவைச் சேர்ந்தவர்கள் சண்டீகரில் பன்சாலுக்கு எதிராக ஞாயிற்றுக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.