முகப்பு
இந்தியா

நாக்பூரில் 8வயது, 17 வயது சிறுமிகள் பாலியல் பலாத்காரம்: 2 இளைஞர்கள் கைது

மகாராஷ்ட்ரா மாநிலம் நாக்பூரில் வெவ்வேறு இடங்களில் இரண்டு  சிறுமிகள் ஏமாற்றி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டனர். இந்த சம்பவத்தில்

Updated On : 5 ஜனவரி, 2024 at 5:37 AM
பகிர்:

மகாராஷ்ட்ரா மாநிலம் நாக்பூரில் வெவ்வேறு இடங்களில் இரண்டு  சிறுமிகள் ஏமாற்றி பாலியல்பலாத்காரம் செய்யப்பட்டனர். இந்த சம்பவத்தில் தொடர்புடைய இரண்டு இளைஞர்களை போலீஸார் கைது செய்துள்ளனர்.

இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது: நாக்பூர் அருகே பிப்லா என்ற கிராமத்தில் துஷார் மிஸ்கின் (24) என்பவர், மிட்டாய் வாங்கி கொடுப்பதாக கூறி 8 வயது சிறுமியை மறைவான இடத்திற்கு அழைத்துச் சென்று பலாத்காரம் செய்துள்ளார். இது குறித்து சிறுமியின் பெற்றோர் போலீஸில் புகார் அளித்தனர். இதனை தொடர்ந்து வழக்கு பதிவு செய்த போலீஸார் துஷார் மிஸ்கின் கைது செய்தனர்.

மற்றொரு சம்பவம்: பந்த்தாரா மாவட்டத்தைச் சேர்ந்த சமித் சதிபாப்னே(26) என்பவர்  நாக்பூர் அருகே உள்ள திகோரி என்ற கிராமத்தைச் சேர்ந்த 17 வயது சிறுமியை திருமணம் செய்வதாக கூறி கடந்த 2013 செப்டம்பர் மாதம் பலாத்காரம் செய்துள்ளார். இதனையடுத்து தன்னை திருமணம் செய்துகொள்ளுமாறு அந்த பெண் கோரியதகாவும், அதற்கு அவர் மறுத்துவிட்டதாகவும் கூறப்படுகிறது.. இந்த சம்பவம் குறித்து போலீசில் புகார் அளிக்கப்பட்டதையடுத்து சமித் கைது செய்யப்பட்டார்.

முழு கட்டுரையைப் படிக்க →