முகப்பு
இந்தியா

"நேஷனல் ஹெரால்டு' வழக்கு விவகாரம்: மூன்றாவது நாளாக முடங்கியது மாநிலங்களவை

"நேஷனல் ஹெரால்டு' வழக்கு விவகாரம் தொடர்பாக காங்கிரஸ் உறுப்பினர்கள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டதால், மாநிலங்களவை தொடர்ந்து மூன்றாவது நாளாக இன்றும் முடங்கியது.

Updated On : 10 டிசம்பர், 2015 at 3:59 PM
பகிர்:

"நேஷனல் ஹெரால்டு' வழக்கு விவகாரம் தொடர்பாக காங்கிரஸ் உறுப்பினர்கள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டதால், மாநிலங்களவை தொடர்ந்து மூன்றாவது நாளாக இன்றும் முடங்கியது.

இன்று காலை அவை கூடியதும், அவைத் தலைவர் ஹமீத் அன்சாரி, உலக மனித உரிமை தின செய்தியை படித்தார். அவர் படித்து முடித்ததும், அவைத் தலைவர் அருகே கூடிய காங்கிரஸ் உறுப்பினர்கள் அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பத் தொடங்கினர்.

காங்கிரஸ் உறுப்பினர்களின் அமளியால் 'ஜீரோ அவர்' மற்றும் கேள்வி நேரம் பாதிக்கப்பட்டது.

Advertisement

இதனிடையே, அவையின் மையத்தில் கூடிய அதிமுக உறுப்பினர்கள், சென்னை வெள்ளத்தை தேசிய பேரிடராக அறிவிக்க வேண்டும் என முழக்கமிட்டனர்.

தொடர்ந்து கூச்சல் நிலவியதால், துணைத் தலைவர் குரியன் முற்பகல் 11.30 மணி வரையும், பின்னர் 12 மணி வரையும் அவையை ஒத்திவைத்தார்.

இதனிடையே அவையில் இருந்த நாடாளுமன்ற விவகாரங்களுக்கான இணை அமைச்சர் முக்தர் அபாஸ் நக்வி, உறுப்பினர்களின் கேள்விகளுக்கு பதில் அளிப்பதற்கு அமைச்சர்கள் பலர் தயாராக உள்ள நிலையில், காங்கிரஸ் உறுப்பினர்களின் செயல் அவையை முடக்குவதாக உள்ளது என்றார்.

சில உறுப்பினர்கள் கேள்வி கேட்க விரும்வில்லை என்றால், அவர்கள் ஏன் பிற உறுப்பினர்களையும் தடுக்க வேண்டும் என கேள்வி எழுப்பினார் நக்வி.

காங்கிரஸ் மாநிலங்களவையை 'பணயமாக' பயன்படுத்துகிறது குற்றம்சாட்டிய நக்வி, அவையை பாதுகாக்க தலைவர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ரார்.

தொடர்ந்து கூச்சல், குழப்பம் நிலவியதால் மாநிலங்களவை மாலை 3 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.