இன்போசிஸ் வளாகத்தில் பெண் பாலியல் பலாத்காரம்
புணே நகரில் உள்ள இன்போசிஸ் வளாகத்தில் செயல்படும் உணவு விடுதியில் பணியாற்றிய பெண் ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார்.
புணே நகரில் உள்ள இன்போசிஸ் வளாகத்தில் செயல்படும் உணவு விடுதியில் பணியாற்றிய பெண் ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். இதுதொடர்பாக இருவரை போலீஸார் கைது செய்துள்ளனர்.
புணே நகரின் ஹின்ஜேவாடி பகுதியில் இன்போசிஸ் நிறுவனம் செயல்பட்டு வருகிறது.
நிறுவனத்தின் உள்ள செயல்படும் உணவு விடுதியில் வேலை செய்த பெண் ஒருவரை, கடந்த 27 ஆம் தேதி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளார்.
Advertisement
இதையடுத்து அப்பெண் அளித்த புகாரின் பேரில் போலீஸார் வழக்குப் பதிந்து, பரிதோஷ் பாக், பிரகாஷ் மகாதிக் ஆகிய இருவரை கைது செய்துள்ளனர்.
இதனிடையே இச்சம்பவம் குறித்து விளக்கம் அளித்த இன்போசிஸ் நிறுவனம், பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்களுக்கு எப்போதும் நிறுவனத்தில் இடம் இல்லை. மேலும், இக்குறிப்பிட்ட சம்பவத்தில் காவல் துறைக்கு உரிய ஒத்துழைப்பு அளிக்கப்படும் என குறிப்பிட்டுள்ளது.