முகப்பு
இந்தியா

இந்தியர்களுக்கு ஒசோன் படலம் குறித்த விழிப்புணர்வு:மதுரை மீனாட்சி அம்மன் கோயில் சான்று

தமிழகத்தின் மதுரை மாநகரில் அமைந்துள்ள மீனாட்சி கோயிலில் அமைக்கப்பட்டுள்ள பூலோக சக்கரம் மூலம் 700 ஆண்டுகளுக்கு முன்னரே இந்தியர்களுக்கு ஒசோன் படலம் குறித்த விழிப்புணர்வு இருந்துள்ளது.

Updated On : 3 நவம்பர், 2015 at 8:25 PM
பகிர்:

ஹைட்ரோப்ளோரோகார்பன் வாயுக்களால் ஒசோன் படலத்தில் ஏற்படும் பாதிப்புகள் குறித்து புதுதில்லியில் உள்ள தேசிய பசுமை தீர்ப்பாயம் விசாரணை நடத்தி வருகிறது.

செவ்வாய்க்கிழமை நடைபெற்ற விசாரணையின்போது மனுதாரர் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் எம்.சி. மேத்தா, எளிதாக கடத்தப்பட்டு வரும் ஹைட்ரோப்ளோரோகார்பன் வாயுக்களால் ஒசோன் படலத்தில் ஓட்டை விழுவதோடு, பூமியின் வெப்பநிலை அதிகரிக்கிறது என குற்றம்சாட்டினார்.

இதற்கு பதில் அளித்த மத்திய சுற்றுச் சூழல் அமைச்சகம், ஹைட்ரோப்ளோரோகார்பன் வாயுக்களால் மட்டுமல்ல மற்றும் பல காரணிகளாலும் ஒசோன் படலம் சேதமடைகிறது என்றது.

Advertisement

வழக்கை விசாரித்த தீர்பாய நடுவர் அமைச்சக அதிகாரிகளை கடிந்து கொண்டதோடு, ஒசோன் படலம் குறித்த இந்தியர்களே முதன் முதல் அறிந்துள்ளனர் என்றார்.

தமிழகத்தின் மதுரை மாநகரில் அமைந்துள்ள மீனாட்சி அம்மன் கோயிலில் அமைக்கப்பட்டுள்ள பூலோக சக்கரம் மூலம் 700 ஆண்டுகளுக்கு முன்னரே இந்தியர்களுக்கு ஒசோன் படலம் குறித்த விழிப்புணர்வு இருந்துள்ளது. அமைச்சக அதிகாரிகள் வேண்டுமானால் அங்கு சென்று பார்வையிடலாம் என்றார் நடுவர்.

பூமிக்கு மேல சுமார் 15 முதல் 30 கிமீ உயரத்தில் இயற்கையாகவே அமைந்துள்ளது ஒசோன் படலம். இது சூரியனிலிருந்து வரும் பி வகையான புற ஊதா கதிர்கள் பூமிக்குள் ஊடுவுறுவாமல் பாதுகாக்கிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.