பலாத்காரத்தால் பிறந்த குழந்தைக்கு தந்தையின் பரம்பறை சொத்தில் பங்கு உண்டு: நீதிமன்றம்
பலாத்காரத்தில் பிறந்த குழந்தைக்கு, தந்தையின் பரம்பறை சொத்தில் பங்கு பெற முழு உரிமை உள்ளது என்று அலகாபாத் உயர்நீதிமன்றம் இன்று முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்பினை அளித்துள்ளது.
பலாத்காரத்தில் பிறந்த குழந்தைக்கு, தந்தையின் பரம்பரை சொத்தில் பங்கு பெற முழு உரிமை உள்ளது என்று அலகாபாத் உயர்நீதிமன்றம் இன்று முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்பினை அளித்துள்ளது.
நீதிபதிகள் ஷாபியுல் ஹஸ்நென், டி.கே. உபாத்யாய் ஆகியோர் அடங்கிய அமர்வு, இன்று அளித்த தீர்ப்பில், பலாத்காரத்தில் பிறந்த குழந்தையை முறைகேடான முறையில் பிறந்த குழந்தையாகக் கருதி, அதற்கும், பரம்பரை சொத்தில் உரிய பங்கு அளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டனர்.
அதே சமயம், பலாத்காரத்தில் பிறந்த குழந்தை யாருக்கேனும் தத்து கொடுக்கப்பட்டிருந்தால், அதன் உண்மையான தந்தையின் பரம்பரை சொத்தில் இருந்து பங்கு பெற இயலாது என்றும் குறிப்பிட்டுள்ளனர்.
Advertisement