பனிமூட்டம் காரணமாக ஸ்ரீநகரில் விமான சேவை பாதிப்பு
கடும் பனிமூட்டம் காரணமாக ஸ்ரீநகர் விமான நிலையத்தில் இன்று விமான சேவை பெரிதும் பாதிக்கப்பட்டது. தொடர்ந்து 4வது நாளாக விமான சேவை பாதிக்கப்பட்டதால், பயணிகள் சிரமத்துக்கு ஆளாகினர்.
கடும் பனிமூட்டம் காரணமாக ஸ்ரீநகர் விமான நிலையத்தில் இன்று விமான சேவை பெரிதும் பாதிக்கப்பட்டது. தொடர்ந்து 4வது நாளாக விமான சேவை பாதிக்கப்பட்டதால், பயணிகள் சிரமத்துக்கு ஆளாகினர்.
ஸ்ரீநகர் சர்வதேச விமான நிலையத்தில் இன்று காலை அனைத்து விமான சேவைகளும் ரத்து செய்யப்பட்டன. பகல் நேரத்தில் பனி மூட்டம் சீராவதைப் பொறுத்தே விமான சேவை சீரடையும் என்று விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.